Friday 12 May 2017

காதல்..காமம்.( 36,) "அக்கா தங்கச்சி மார புடிச்சு பாரேன்"

"அன்னம்..கொஞ்சம் நில்லேன். சாவி கொடுத்த பொம்மை மாதிரி விசுக்.. விசுக்னு போயிட்டியே இருக்கியே..?"

மேல ஆடி வீதி பிரகாரத்தில் போய்க்கொண்டிருந்தவளை  தடுத்து நிறுத்துகிறான் வெள்ளிங்கிரி. போலீஸ் ஸ்டேஷனுக்கு தங்கராசுவை  கூட்டிக்கொண்டு போன அடுத்த அரை மணி நேரத்தில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டான். அன்னமயிலு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  கோவிலுக்கு வருவாள் என்பது அவனுக்கு தெரியும். அவளை அவன் விரும்புகிறான் .

" நீ என்ன பாலோ பண்ணிட்டு வர்றது எனக்கும் தெரியும்.நீ எந்த மாதிரி ஆளுங்கிறதும் தெரியும். என் பின்னாடி அலையிறத நிப்பாட்டிக்கோ. வீணா வெட்டி வெவகாரத்த இழுக்காத.! அதுக்கேத்த ஆளு நான் இல்ல."

"என்ன பத்தி என்ன தெரியும்?"

"பொம்பள பொறுக்கி!"

"பொறுக்கி எடுத்ததால்தான்டி  உன் பின்னாடி வரேன்!"

"கோயில் பிரகாரம். அதான் என் கால்ல செருப்பு இல்ல!மரியாதைய கெடுத்துக்காத.!"

"பிரகாரம்கிறதாலதான் உன்ன கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்கல!"

"பெரிய வீட்டுப்புள்ளன்றதால அசிங்கப் படுத்த விரும்பல. போயிரு!"

"போகலன்னே என்னடி பண்ணுவே!?"

"எச்சக்கல நாய கோவிலுக்குள்ள விட்டதே தப்புன்றத  இங்க இருக்கிறவங்க  எல்லோரும் தெரிஞ்சிக்குவாங்க.உங்கூட  இம்புட்டு நேரம் பேசுனதே தப்பு.டா ..தட்டுக்கெட்ட நாயே!" என்று சத்தம் போட்டு சொன்னதுடன் அவனின் சட்டையை  இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். "எடுபட்ட பயலே "என்றபடியே  பளார் பளார் என அறை விட்டாள். ஆடி வீதியில் காற்று வாங்கியபடி உட்கார்ந்திருந்தவர்களும் ,பிரகாரம் சுற்றி வந்தவர்களும் சேர்ந்து கொண்டு சாத்துபடி நடத்தினார்கள். யாரும் காரணம் கேட்கவில்லை.அவர்களாகவே  சொல்லிக்கொண்டார்கள்.

"இடிக்கிறதுக்குன்னே வந்திருப்பான். மார புடிச்சிருப்பான்.சேட்டை பண்ணிருப்பான்" இப்படி இன்னும் என்னன்னவோ!

"ஏண்டா ..காவாலிப்பயல. உன் அக்கா..தங்கச்சி மார பிடிச்சுப்பாரேன். எப்படி  இருக்குன்னு வீட்டுலேயே தெரிஞ்சிருக்கலாமேடா " என்று  ஒருத்தன் மூக்கில் குத்து விட்டான்.இவ்வளவு நடக்கிறது. அதை பார்க்க அங்கு  அன்னம் இல்லை. கூட்டம் சேர்ந்ததும் கிளம்பி போய் விட்டாள்.   . 

அடி.... அவமானம் ..! அப்படியே உட்கார்ந்து விட்டான் வெள்ளிங்கிரி. இப்படி  நடக்கும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. பொம்பள பொறுக்கி என்று அன்னம் சொன்னதும் அவனுக்கு ஆத்திரம் வந்து விட்டது.அவனும் வார்த்தையை விட்டுவிட்டான்..

தலையை குனிந்தபடி உட்கார்ந்து விட்டவனை  அதுவரை மொத்தியவர்களும்   விட்டு விட்டார்கள்.ஆனால் ஆலயத்தில் இருக்கிற போலீஸ்காரர்கள் விட்டு  விடுவார்களா?

கூட்டிக்கொண்டுபோய் விட்டார்கள்.

உண்மை  நிகழ்வு. புனைய பட்ட கதை. தொடர்.  

1 comment: