Thursday 30 March 2017

என் மனைவி எடம் காலி...!

"என்னடா  தலைவர்  வீட்டுக்கு முன்னாடி வரிசை கட்டி நிக்கிறானுங்க?"

"அதை ஏன்டா  கேக்கிற ? நேத்து மப்புல பொதுகூட்டத்தில  பேசுற போது  என் மனை எடம் காலியா இருக்கு. கூட்டம் போடுறதுக்கு வசதியா இருக்கும் .அப்ளை பண்ணுங்கன்னு   பேசுறதுக்கு பதிலா மனைவி எடம் காலியா இருக்குன்னு அப்ளை பண்ணலாம்னு  பேசிட்டாரு.அதான் அவனவன் ஜாதகத்தை தூக்கிட்டு வந்து வரிசைல நிக்கிறானுக! "

"அய்யயோ...அப்ப வீட்டம்மா சும்மாவா இருக்காங்க ?"

"வரி வரியா தலைவர்  முதுகுல அம்மா கோடு போட்டாச்சு!" 

**************************************************

"உங்க பையன் பரீட்சையில எப்படி எழுதி இருக்கான்?"

"பார்த்துதான் எழுதிருக்கேன்.சென்டம் ஷ்யூர்னு சொல்றான்!"

"எனக்கு பொறந்த பயபுள்ள படிச்சுட்டுதான் எழுதிருக்கேன்.ஸ்டேட் பர்ஸ்ட் வரும்கிறான்.யாரை நம்புறது?"

************************************************************

"பெண்டாட்டிய விட பேயே பெட்டர்னு சொல்றியே ஏன்டா"?

"பேய்க்கு  சமைக்க தெரியாது.லேட்டா போனாலும் அடிக்காது."

**************************************************

" சம்மருக்கு எங்க போகப்போறே?"

"மச்சினன் குடும்பத்தோடு வர்றதா லெட்டர் போட்ருக்கான். அதான் நான் வேலூருக்கு போறதா பதில் எழுதிருக்கேன்."

"அது வெயில் நகரமாச்சே!"

"அப்பத்தானே  ப்ரோகிராமை கான்சல் பண்ணிட்டு ஊரோடு கெடப்பான்.!" 

***************************************************

"என்னடா மந்திரி செம காண்டுல இருக்காரு?"

"அஞ்சா சிங்கமே வருகன்னு எழுதுறதுக்கு பதிலா கஞ்சா சிங்கமே வருகன்னு பிளக்ஸ் வச்சிட்டாய்ங்கலாம்! வாட்டி வதக்கி எடுக்கிறார்.!"

********************************************






 

Wednesday 29 March 2017

பிரியமுள்ள குரங்கு சுவர்ச்சலாவுக்கு...!

ப்ரிய சகி சுவர்ச்சுக்கு,
                              லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சுடி கண்ணே. என்ன திடீர்னு  பாசம் பொங்கறதுன்னு  கேக்கிறியா? சுசி லீக்ஸ் டுவிட்டர்ல பார்த்தேன். அப்புறம் ஹைதராபாத் சினிமா விழாவுக்கு வந்த நடிகைகளை பார்த்தேன். எல்லாமே  அரைகுறைதான்! எதை மறைக்கனுமோ அதெல்லாம் மொசக்குட்டி மாதிரி தலையை நீட்டுது. அப்படி வந்தாதான் நாகரீகமாம். எழவெடுத்தவன் எவன் சொன்னான்னு தெரியல,இப்படி வந்தா எவனுக்குடி   ஆசை வராது?தாவி வருவானா  மாட்டானா?
         
                            சினிமா நடிகை டாப்சி டில்லியில இருந்தபோது பஸ்லதான்  போகுமாம். கூட்ட நெரிசல யூஸ் பண்ணி அங்கெல்லாம் உரசுவாங்குவாய்ங்கலாம். என்ன பண்றதுன்னு தெரியாம வீட்டுக்கும் சொல்லாம ஒரு மாதிரியா  கதையை ஓட்டியிருக்கு! எவனோ ஒரு கேடிப்பய பின்பக்கமா தடவி கொடுத்திருக்கான். எத்தனை நாளைக்கிடா  இம்சைய கூட்டுவிங்க  இன்னிக்கி சிக்குனான்டா அடிமைன்னு அவனோட ரெண்டு விரலையும் திருகி கிள்ளி வைக்க பய ரன்னிங்கிலேயே எறங்கி ஓடிருக்கான்.

                     கிஸ் அடிக்கிற படத்துக்கு இப்பல்லாம் தடை இல்ல.அதல்லாம் பார்க்கிற போது ஆம்பள பயலுகளுக்கு உதடெல்லாம் நமச்சல்.ஒரு தல காதல்னு ஆளை தேடுறான்.போடா பொறுக்கின்னு செருப்பை காட்டுனாலும்  உன்னோட சேவடி பட்டதாச்சே..போடு வாங்கிக்கிறேன்னு குனியிறான். இந்த குனியிர பழக்கத்தை கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்! கூனல் விழுந்த பயலுக மாதிரி அந்தம்மா காருக்கே கும்பிடு போட்டு வழி காட்டிட்டு பழக்கத்தை மாத்த முடியாம இப்ப எந்தெந்த ஜீவராசிகளுக்கோ குனியிரானு ங்க. தப்பித்தவறி கோவிலு காளைகள் கண்ணுல மாட்டிரக் கூடாதுன்னு பகவா னை  வேண்டிட்டிருக்கேன்.

                    இதெல்லாம் பார்க்கிறவனுக்கு பொண்டாட்டி மேல ஆசை வரத்தான் செய்யும்.வேலை விட்டு வீட்டுக்கு போனவனுக்கு நோக்கமெல்லாம் அதாத்தான் இருக்கும். போறபோதே ரெண்டு மொளம் மல்லிப்பூ வாங்கிட்டு போவான்.அவ தலையில ஆசையா வச்சு விட்டு காதோரமா முகத்தை கொண்டு போனா ஏழேழு ஜென்மம் புண்ணியம்டி!

                   அதான் சுவர்ச்சலா ...உனக்கு லெட்டர் எழுதினேன்.
                                                                                இப்படிக்கு உன்னுடைய கணவன்,
                                                                                          குரங்கார்.

Saturday 25 March 2017

ஞாயித்துக் கெழமையாச்சும் வீட்டோடு கெட!

"விடிஞ்சி போனா அடைஞ்சுதான் வீட்டுக்கு வர்ற. இன்னிக்கி ஞாயித்துக் கிழமைதானே..... வீட்டோடு கெடக்க வேண்டியதுதானே..வாய்க்கு ருசியா  கெளுத்தி மீனு கொளம்பு.தின்னுட்டு கெடக்கவேண்டியதுதானே. .சினிமாவுக்கு கூட்டிட்டு போக முடியல.டிவி.ல வர்ற படத்தையாவது சேந்து பார்ப்பமே"

அவ ஆசையை தப்புன்னு சொல்ல முடியாது.என் வேல அப்பிடி.காலம்பர 8 மணிக்கி இருக்கலேன்னா ஆப்சென்ட் தான் .சம்பளத்தில் பாதிய பிடிச்சிருவான் .ராத்திரி எத்தன மணிக்கு காண்ட்ராக்ட்காரன் விடுவான்கிறது  தெரியாது.பெரும்பாலும் பத்து மணிக்கு வீட்டுக்கு போயி நாலு வாய் தின்னிட்டு  அலுப்பில கண்ண அசந்திருவேன். எத்தன நாளு அவ ஆசையா  பூ  வாங்கி அந்த சின்ன கொண்டைக்குள்ள சொருகி இருப்பா.அந்த சந்தோசத்துக்கு ஆச பட்டது தப்புன்னு சொல்ல முடியுமா? ஆனா  அவளுக்கு கொடுக்க முடியல.வேல பாத்து களச்சிப்போன ஒடம்பு  படுடான்னு எனக்கு வசப்படுறது இல்ல. அதான் இன்னிக்காவது  வீட்டோடு கெடன்னு சொல்றா!

ஆனா ஆர்.கே. நகர் தேர்தலுக்கு தொப்பி வச்சிட்டு தெரு தெருவா கத்திட்டு போனா பிரியாணி,குவாட்டரு ,கையில ஆயிரம்னு தருவாங்கன்னு  சொல்றாங்க. இது எக்ஸ்ட்ரா வருமானம்தானே.குடும்ப செலவுக்கு  ஒதவுமே!
நாம்ம அதிகமா கத்துன்னா கூலி கூட கொடுப்பாங்களாம்.இத விட மனசு இல்ல..

ஆனாலும் அவளின் ஆசைய நிறைவேத்தலேன்னா  நான் நல்ல புருசனா  இருக்க முடியுமா? யாருக்கோ கொடி பிடிச்சி தொப்பி வச்சிக்கிட்டு சுத்துறதினால காசுதான் கிடைக்கும்.நான் அந்த கட்சியும் இல்ல.என் பொண்டாட்டி சொன்னத கேட்டு வீட்டோடு கெடக்கலேனா  நான் என்ன மனுசன்?

"கொஞ்சம் பொறு புள்ள ! தெரு முக்கு வரை போயிட்டு வந்திறேன் " என்று அவளின் கன்னத்தில செல்லமா தட்டிட்டு புறப்பட்டுப் போனேன்.

வீடு திரும்பிய போது கை நெறைய மல்லிப்பூ.!

இன்னிக்கி எங்க வீட்ல மாட்னி ஷோ!

சொர்க்கம் என்பது என் வீட்டில்,,,!

நண்பன்.; " என் சம்சாரம் மாதிரி உலகத்தில யாருமே இருக்கமாட்டாங்க!"

மற்றவன்.; " எதை வச்சு இப்படி சொல்றே? அப்படி என்ன அதிசயம்?"

நண்பன்.: " பிரியாணியும் குவார்ட்டரும் வாங்கி கொடுத்திட்டு  வலி  தெரியாம                      அடிப்பா.! வென்னீர்ல ஒத்தடம் கொடுப்பா!
----------------------------------------------------------------

தொண்டன்.: " பொதுக்குழுவை அவசரமாக தலைவர் கூட்டிருக்காரே .புதுசா ,                        போராட்ட அறிவிப்பு எதுவும் வரப் போகுதா?

மற்றவன்.: "ஒரு நாள் போராட்டம்னுதானே அறிவிச்சோம்.அதுக்கு  எதுக்கு
                         பதினஞ்சு நாள் காவலில் போட்டிங்கன்னு கவர்னர்கிட்ட  மனு                         கொடுக்கப்போறாராம்.அதுக்காக கூட்டிருக்காரு!
--------------------------------------------------------------------

ஆசிரியர்.: " சொர்க்கம் என்பது என்னவென்று தெரியுமா?"

மாணவன்.: "அது எங்கள் வீட்டில் இருக்கு சார்!"

ஆசிரியர்.: "என்னடா சொல்றே?"

மாணவன்.: "சொர்க்கத்துக்கு போறதா சொல்லி எங்கப்பாவும் அம்மாவும் 
                       அடிக்கடி ரூம பூட்டிக்கிராங்க சார்!

ஆசிரியர்.: ??????????????
--------------------------------------------------------------------------------

மனைவி.: " எதுக்கு இந்த மிதி மிதிக்கிறிங்க. பெட்ரோல்  இருக்கோ  ,
                      இல்லியோ?"

கணவன்.: "அது எல்லாம் இருக்கு. பைக் செல்ப் எடுக்க மாட்டேங்கிதுடி!"

மனைவி.: "நம்ம புள்ள நல்லா செல்பி எடுப்பானாம்.அவன கூப்புடுங்க!"

கணவன்." ??????????????????
----------------------------------------------------------------------
              

Friday 24 March 2017

காதல்...காமம். (30.)

"ஏய்! நீ  இன்னமும் அருவாமனையை கீழே போடலியா?"--சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் எஸ்.ஐ..

கூடவே இரண்டு போலீஸ்காரர்கள்.! ஆத்தாக்காரி ராசம்மா மட்டும் வந்திருக்கிறாள். அருவாமனை வெட்டு ஆழம் என்பதால் டாக்டர்கள் போலீசில் சொல்ல கேஸ் ஆகி விட்டது. சிவனாண்டி தற்போது  பெரிய ஆஸ்பத்திரியில்  உள் நோயாளி!.புருசன் ,பொண்டாட்டி இருவரும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் போலீஸ் விடவில்லை.குற்றவாளியை கைது செய்தே தீருவோம் என்று சொல்லி வீடு வரை வந்து விட்டது.

"ஊர் சிரிக்க வச்சிட்டியேடி! வயசு புள்ள.போலீஸ் டேசனுக்கு போவலாமா?அப்படி என்னடி அந்த மனுசன் ஒன்ன சொல்லிப்புட்டாரு? மவளுக்கு அப்பன் புத்தி சொல்றது குத்தமாடி கூறு கெட்ட குந்தாணி முண்ட!"

பொன்னி எதுவும் பேசுவதாக இல்லை போலும். கையில் பிடித்த அருவாமனையை மேலும் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

தெளிவாக பேசுகிறாள் எஸ்.ஐ.யிடம்!

"அப்பன் மவள் சண்டை போட்டுக்கிட்டோம். ஆத்திரத்தில் வெட்டினேன். குத்தம்தான்..இல்லேங்கலே.!விசாரணையை வீட்டோடு வச்சுக்குங்க. படி தாண்டி ஸ்டேசனுக்கல்லாம் வர மாட்டேன்.!என்ன கேவலப்படுத்தாம விசாரணை  பண்ணுங்க,கேளுங்க."

"வெறி பிடிச்சு வெட்டிப்பிட்டு வியாக்கியானமா பேசுற? படிச்ச பொண்ணு! மொரண்டு பிடிக்காம வந்திட்டா மரியாதை.இல்லேன்னா பொம்பள புள்ளன்னு  கூட பாக்க மாட்டேன்.செவுலை திருப்பிடுவேன்."-என்றபடியே  எஸ்.ஐ. நெருங்கினார்.

"அப்படியே நிக்கணும்! அதுக்கும் மேல ஒரு அடி எடுத்து வச்சா நடக்கிற கதையே வேற.!கழுத்த அறுத்துக்கிட்டு செத்திருவேன்." என்று மிரட்டவே   எஸ்.ஐ.யின் காலில் விழுந்து விட்டாள்  ராசம்மா.

"ஐயா எசமான்.ரத்தம் சிந்துன வீட்டுல எழவு வேற  விழுகனுமா? கிறுக்கு புடிச்ச முண்ட! சொன்னபடி செஞ்சாலும்  செஞ்சிருவா!. ஒத்தப்புள்ளைய காவு கொடுத்துட்டு  நாங்க நாதியத்து கெடக்கனுமா? விட்ருங்க ஐயா!"

"பொட்டப்புள்ள மெரட்டுராங்கிறதுக்காக  விட்டுட்டு போறதுக்கா கவர்மெண்டுல எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க.? கையில இருக்கிற அருவாமனையை புடுங்குறதுக்கு எவ்வளவு நேரமாகப்போகுது? எந்திரிம்மா! ஒன் மகள் கையில இருக்கிறத நீயே வாங்கு.! மத்ததை நாங்க பாத்துக்கிறோம்!"

சப் இன்ஸ்பெக்டர் உறுதியாக  இருந்தார்.

எப்படியோ தகவல் கிடைத்து மகன் தங்கராசுவுடன் வீட்டுக்குக்குள்  நுழைகிறார்  வடிவேலு.!

"என்ன காரியத்த பண்ணிருக்கே தாயி! பெத்த அப்பனையா வெட்டுறது." என்று வடிவேலு பதறினார்.

"இந்த காரியத்த பண்றதுக்கு பதிலா நீ என் வீட்டுக்கு வந்துருக்கலாமே பொன்னி!"என்றபடியே அவளிடம் நெருங்கப் பார்த்தான். வேறு ஏதாவது தப்பு  நடந்து விடக்கூடாதே என்கிற பயத்தில்!.

"அந்த கெழவன் என்ன பேசுனாங்கிறது ஒனக்கு தெரியுமா ராசு? ஒன்னை வெட்டி கொன்னுடுவானாம்.கன்னத்தில ஓங்கி அறைஞ்சா எனக்கு ஆத்திரம்  வருமா வராதா?அதான் வெட்டுனேன். அப்பன் ஆத்தா தயவுல நான் வாழணும்கிறது அவசியம் இல்ல! அப்பன வெட்டுன பழியோடு ஒன் கூட வாழவும்  போறதில்ல."

"தப்பா பேசாத பொன்னி.! நீ ஜெயிலுக்கு போனாலும் நீதான் என் பொண்டாட்டி. நீ என் கூட வா. ஸ்டேசனுக்கு போகலாம் ."

"நீ என்னதான் சொன்னாலும் நான் ஸ்டேசனுக்கு வர மாட்டேன் ராசு!."

"துப்புக்கெட்டவளே...ஒன்ன அந்த தம்பிக்கே கட்டி கொடுக்குறோம்டி. பிடிவாதத்தை விட்டு அந்த தம்பியோடு போ! உங்கப்பன் உசிருக்கு ஒன்னும்  ஆயிடாதுன்னு பெரிய டாக்டர் சொல்லிட்டாரு.என் புருசனை நான் பாத்துக்கிறேன். வாழப்போற பொண்ணு.!.சொல்றத கேட்டு நடடி!"  ராசம்மா  கை எடுத்து மகளை கும்பிடுகிறாள்.

சப்-இன்ஸ்பெக்டருக்கு கடுப்பாகி விட்டது.கத்துகிறார்.

"என்னய்யா ..என்னை  என்ன சும்பன்னு நெனச்சிட்டு டிராமா போடுறீங்களா?  அத்தன பேரையும் அள்ளிப்போட்டுட்டு போயி நாலு சாத்து சாத்த தெரியாதுன்னு நெனச்சிட்டிங்களா? அவ என்னடான்னா அருவாமனையை வச்சுக்கிட்டு பூச்சாண்டி காட்டிட்டு இருக்கா.. நீங்க என்னடான்னா சினிமா டயலாக் பேசுறீங்க..வெலகி நில்லுங்கடா  வெண்ணைகளா?" என்று நெருங்கி செல்ல , இரண்டு போலீஸ்காரர்களும் வடிவேலு, தங்கராசுவை சுவர் ஓரமாக  தள்ளி விட்டனர். 

ஆனால் தங்கராசு அப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது.

பொன்னியே நினைத்தும் பார்த்திருக்க மாட்டாள்.

அப்படி என்ன தான் நடந்தது?

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக வைத்து புனையப்படுகிற தொடர் இது.

இங்கு பிரசுரிக்கப்பட்ட படத்துக்கும் புனைவுக்கும் தொடர்பு இல்லை.

Saturday 18 March 2017

காதல்...காமம்.( 29.)

"நாசமத்து போவாளே ! என் தாலிய  அக்கவா பொறந்தே!வெட்டிப்பிட்டியேடி என்  ராசாவ! வெளங்காம போவடி...!"

பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.ராசம்மா.

சிவனாண்டி துடிக்கிறார். இடது முழங்கையில் சற்று  கீழாக அருவாமனை வெட்டு.! ஆழமாகத்தான் விழுந்திருக்கும் போல.! ரத்தம் ஒழுகுகிறது. வலி  தாங்காமல் கத்த ஆரம்பித்து விட்டார்.

"ஆம்பள சுகத்துக்கு ஆசப்பட்ட அந்த பொட்ட சிறுக்கிய   வீட்ட விட்டு வெரட்டுடி  ! " வலி, ஆத்திரம், பெத்த மகளே எவனுக்காகவோ சொந்த அப்பனை வெட்டவும்  துணிந்திருக்கிறாள் என்றால் யாரும் நிதானம் இழக்கவே செய்வார்கள் என்கிறபோது சிவனாண்டிக்கு அது பொருந்தாதா என்ன?

அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். ராசம்மா கையில் கிடைத்த  துணியை வைத்துக் கட்டுப் போடுகிறாள். "யாரு மோகத்தில முழிச்சேனோ  என்  வீட்டுலேயே ரத்தக்காவு! வாங்க .பெரிய ஆசுபத்திரிக்கு போவோம்.வாய்யா என் கொலசாமி! வழியிலேயே சட்கா வண்டிய புடிச்சுக்குவோம்."

புருசனின் கவட்டுக்குள் கையை கொடுத்து தாங்கிப்பிடித்து  தூக்குகிறாள். சட்டை வேட்டி எல்லாம் ரத்தம்அவளுக்கும் ரவுக்கை,சேலை எல்லாம் ரத்தம்.
இவ்வளவும் நடக்கிறது. அப்பன் துடிக்கிறான். வாயில் வரக்கூடாத வார்த்தைகளால் அம்மா  வைகிறாள்.

ஆனால் அருவாமனையை கீழே போடவில்லை. வெறித்தபடியே அவர்களை பார்க்கிறாள்  பொன்னி.! ஆவேசம் தணியாத சாமியாடி மாதிரி  மூசு மூசு என்று மூச்சு விடுகிறாள் .. நடந்து விட்ட  விபரீதம் பற்றி  அவள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.

அதற்குள் ஊரே கூடி விட்டது. குதிரை வண்டியில் ஏற்றி விட்டு அவர்களுடன் சிலர் சைக்கிளில் பின் தொடர்ந்தார்கள்.

இந்த மாதிரி சம்பவங்களில் பேசுவதற்கென சில ஜன்மங்கள் இருக்குமே... ! வீட்டுக்குள் நுழைந்து அருவாமனையை வாங்கி அங்கிருந்த மேஜையில் வைத்தாள்  ஒருத்தி " ஏன்டி துப்புக்கெட்ட ஈன சிறுக்கி. பெத்த அப்பனையா கொல செய்ய பார்த்தே..அந்த மனுசன் ஒன்ன  கண்ணுக்குள்ளேயே வச்சு வளர்த்தாரடி! "என்று பொன்னியின்  குமட்டில் இடிக்கிறாள்.! பொன்னி எதுவும் பேச வில்லை. அவிழ்ந்து கிடந்த கூந்தலை கோடாலிக் கொண்டையாக போட்டுக் கொண்டாள்.பிரமை பிடித்த மாதிரியே அவர்களை பார்க்கிறாள்.

ஒருத்தி உரிமை எடுத்துக்கொண்டு வாளியில் தண்ணீர் எடுத்து வந்தாள். தரையில் இருந்த ரத்தக்கறை எல்லாம் கழுவுகிறாள்.போலீஸ்காரன் வந்து விசாரிப்பானே என்பதெல்லாம் அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை. பொன்னியை காய்ச்சி எடுக்க அவர்களுக்கு அதுதான் நல்ல சமயம். விட்டால் வேறு வாய்ப்பு வராது.

"வெளங்காத சிறுக்கி. வெட்டிப்புட்டா. எவன் கூட  ஓடி போக நெனச்சாளோ! வெவரம் தெரிஞ்ச மனுசன் கண்டிச்சிருக்காரு. அரிப்பெடுத்த நாய்க்கு  ஆத்திரம்! .போட்டுத் தள்ளிருக்கு. கழுத்துக்கு வச்ச குறி எந்த சாமி புண்ணியமோ  தப்பி கைக்கு எறங்கி இருக்கு!"---அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு வீட்டை கூட்டுகிறாள் ஒருத்தி. கிட்டத்தட்ட ஏழெட்டு பேர்.  அவர்களது கற்பனை வளம் வார்த்தைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பொன்னிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய முன் கோபத்தின் விளைவு  இப்பத்தான் புரிய ஆரம்பிக்கிறது.

அழ ஆரம்பிக்கிறாள்.விபரீதம் புரிகிறது. விம்மியவள் 'ஓ" வென குரல் எடுத்ததும் அங்கிருந்த பெண்டுகளுக்கு ஆச்சரியம்.சிலருக்கு பயம், 'கிறுக்குப்  பிடிச்சிருச்சோ?'

மேஜையில் வைக்கப்பட்ட அருவாமனையை ஓடி சென்று எடுத்ததும் மற்றவர்களுக்கு பயம் வந்து விட்டது. கண்டபடி வைததால் நம்மையும் பதம் பார்த்து விடுவாளோ என்கிற பயம்.

"எதுக்குடி அருவாமனைய தூக்குனே...ஒன் நன்மைக்குத்தானேத்தா சொன்னோம். பெத்த அப்பனையே வெட்டிப்புட்டியே நாளைக்கு தாலி கட்டி  போற வீட்டுல ஒனக்கு மருவாதி இருக்குமா?  பொண்ணு கேட்டு எவனாவது வருவானா..?இதுக்காகத்தானத்தா இம்புட்டு பேச்சு பேசுனோம்."

 பொன்னியின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்கிற பயத்தில் அவர்கள்  ஆளாளுக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்க  வாசலில் வந்து நிற்கிறது போலீஸ் ஜீப்!

யாருமே எதிர்பார்க்கவில்லை! அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதை.!

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்  இது. அடுத்து  என்ன  நடந்தது என்பதை  பிறகு பார்க்கலாம்.


Saturday 11 March 2017

காதல்..காமம். ( 28.)

'நா என்னத்த சொல்ல கெடக்கு? வீட்டுக்குப் பெரியவக  ஒங்க சொல்லுக்கு மறு  சொல்லு நா என்னிக்கி சொல்லிருக்கேன். எங்கண்ணனுக்கு என்ன சொல்றதங்கிரத நா பாத்துக்கிறேன். ஒங்க முடிவ நீங்க சொல்லிருங்க?' என்று  நைசாக நழுவிக் கொண்டாள் ராசம்மா.

இதைத்தான் பொன்னியும் எதிர்பார்த்திருந்தாள். பெத்தவ பெருமை மகளுக்கு  தெரியாதா என்ன? அப்பனை இப்படி எத்தனை நெருக்கடிகளில் மாட்டி  விட்டிருக்கிறாள்.?

எதுவும் தெரியாதவளைப்போல அங்கு வந்தாள் !


" இல்லாத சாமானை இருட்டில ரெண்டு பேரும் தேடிக்கிட்டிருக்கிங்க.அப்படி என்னத்த தேடுறிங்க" என்று அப்பனையும் ஆத்தாளையும் மறைமுகமாக நக்கல் விட்டவள் வடிவேலுவை பார்த்து    "என்ன மாமா இன்னும் இங்கனயே  இருக்கிங்க. மத்தியான விருந்துன்னு எங்க அய்யா சொன்னாரா?" என்று சின்னதாக ஒரு சேட்டை.

"அப்படியெல்லாம் இல்லத்தா!"என்ற வடிவேலு " போயிட்டு வாறேங்க..நல்ல  முடிவா சொல்லி விடுங்க"என்று சிவனாண்டிக்கும் ராசம்மாவுக்கும் ஒரு  கும்பிட்டை போட்டு வெளியேற  அவரை வாசல் வரை சென்று வழி  அனுப்பி வைத்தாள் பொன்னி.!

இனிதான் ஆரம்பமாகிறது  பொன்னியின் அதகளம்.

"என்ன பெத்தவளே! எனக்கு ஒரு மொறைமாமன் இருக்காங்கிறத இத்தனை  காலமும் எதுக்கு மறச்ச? அவன் எங்கிட்டு இருக்கான் என்னத்த பண்றாங்கிறத  சொல்லுத்தா! அய்யா சொல்லித்தான் எல்லா சங்கதியும் தெரியிது? இன்னும் என்னத்தயல்லாம் மறச்சிருக்கிங்க?"

சட்டமாக நாற்காலியை சரட்டுன்னு இழுத்துப்போட்டு உட்கார்ந்தாள்.மகா ராங்கி!

"இப்படியெல்லாம் ரெண்டு பேரும் கூத்துக்கட்டி எவன் தலயிலாவது கட்டி விடலாம்னு பார்த்திங்கன்னா மூட்டப்பூச்சி மருந்த ஊத்தி உங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு நான் சந்தோசமா தங்கராசோட வாழப் போயிருவேன்.மத்த பொண்ணுங்க மாதிரி இருப்பேன்னு மட்டும் நெனச்சிருதேங்கப்பு! நான் பத்ரகாளி!"

விரலை ஆட்டி ஆட்டி பேசுகிறாள். சிவனாண்டி ,ராசம்மா இருவருக்கும்  ஆச்சரியம். "நாம்ம பெத்த பொண்ணுதான் இப்படி பேசுறாளா?"

"அவன் உசிரோடு இல்லேன்னா எவன கட்டிப்பே? "

தோளில் கிடந்த துண்டை எடுத்து தலப்பாவாக கட்டிக் கொண்டு கேட்கிறார்  சிவனாண்டி.!அவரும் விடுவதாக இல்லை.

அப்பனுக்கும் மகளுக்கும் பெரிய சண்டை நடக்கப்போகுது என்பதுதெரிந்து விட்டது ராசம்மாவுக்கு!

"அந்த சின்ன சிறுக்கிதான் கொழுப்பெடுத்து அப்படி பேசுறான்னா நீங்களும்  சரிக்கு சரியா மல்லுக்கு நிப்பீங்களா? அவ மூட்டப்பூச்சி மருந்துங்கிறதும்  நீங்க ஊரான் வீட்டுப்பிள்ளையை கொன்னுருவேன்னு சொல்றதும் ....யார் காதுலயாவது விழுந்துச்சுன்னா நம்மள காரி துப்பிருவாய்ங்க!"

"நான் ஓடிப்போயிட்டேன்னா மட்டும் உங்கள மணத்துக்குவாய்ங்களாக்கும்?" பொன்னியும் விடுவதாக இல்லை.இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்பதில்  உறுதியாக இருக்கிறாள்.சிவனாண்டிக்கு ஆத்திரம் உச்சி மண்டையில்!

"பாத்தியாடி.பயபிள்ள என்னமாதிரி வாயடிக்கிதுன்னு?பொட்ட பிள்ளைய அடுப்பங்கரையில உக்காரவைக்காதது எந்தப்புதான்! ஓடி போயிடுவாளாம்ல?
கால வெட்டி நொண்டிக்கிட்டு கெடன்னு விட்டா என்ன பண்ணுவா?" என்று சத்தம் போட்டபடியே ஓடி வந்து ஓங்கி ஒரு அறை விட்டார்.

நாற்காலியில் உட்கார்ந்திருந்த பொன்னி மடாரென தரையில் விழ இதையெல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ராசம்மா  பதறிப்போனாள், வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கத்துகிறாள்."என்ன பெரிய மனுசன்யா! ..பொட்டப்புள்ள மேலயா கைய நீட்றது? என்ன பாவம் செஞ்சேன்னு  தெரியலிய. அப்பனும் மவளும் இப்படி மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தா பய மக்க சிரிச்சுப்புடமாட்டாகளா.? நாறிப்போகும் நாறி!  "என்று  புருசனை மடக்கி நிறுத்தி தள்ளி  விட்டு அப்படியேதரையில் கிடந்த  மகளையும்விட்டாள் ஒரு  எத்து!

பொன்னி எதிர்பார்க்கவில்லை.

ஆவேசமாக எழுந்தவள் அடுப்படிக்கு சென்று அருவாமனையை எடுத்துக் கொண்டு வருகிறாள்.தலை விரிந்து கிடக்கிறது.கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.என்ன பேசுகிறோம் எதை செய்கிறோம் என்பது பொன்னிக்கு தெரியவில்லை.பாம்பாக சீறுகிறாள்,

"புருசனும் பொண்டாட்டியுமா சேர்ந்து என்ன கொல்ல பாக்கிறிங்களா..
.அந்தாளு அடிக்கிறான்.கெழட்டு சிறுக்கி நீ மிதிக்கிறே....ஒங்களை இன்னிக்கு வெட்டாம விடமாட்டேன். செயிலுக்கு போனாலும் கவலையில்ல.ரெண்டுல ஒன்னு பாத்திட வேண்டியதுதான்!" என்றபடியே அருவாமனையை ஓங்கினாள்.

சிவனாண்டியின் கையில் விழுந்தது வெட்டு!

உண்மை நிகழ்வின் அடிப்படையில்  புனையப்படும் தொடர் 


  

Monday 6 March 2017

கேண சிறுக்கி கோணலா போட்ட கோலம்!

"சக்கர பொங்கல் வைக்கிறேன்னு புளியோதரை கிண்டுனவதானே நீ! எட்டுப் புள்ளில கோலம் போடுறேன்னு வாச முழுக்க கிறுக்கி வச்சிருக்கியே ..என்னடி  விசேசம்?"

"நான் குளியாம இருக்கேன் அத்தே! தீட்டு நின்னு அஞ்சு நாளாச்சு! "

"கேணச்சிறுக்கி! ஒவ்வொரு மாசமும் இதயே சொல்லிட்டிருக்கே..வயறுதான் உப்ப மாட்டேங்கிது! ஏண்டி..வெளங்காத சிறுக்கி. ஒம் புருசன்தான் சிங்கப்பூரில் கெடக்கிறானே.அப்பறம் எப்படிடி மாசமா இருப்பே?"-- அத்தைக்காரிக்கு செம கோபம்.புருசன் வெளிநாட்டில் இருக்கிறபோது இவ ஒவ்வொரு  மாசமும் இப்படி சொல்லிட்டு திரியிறாளே!வயத்தில கோளாற வச்சிக்கிட்டு இந்த சிறுக்கி மருத்துவச்சியையும் பார்க்காமல்... ச்சே  என்ன பொண்ணு இவ? அப்பிராணியா ,பாம்புராணியா?

"  ஏண்டி மானங்கெட்ட மல்லாரி. புருசன் கூட சேர்ந்து படுத்தாதான் புள்ள பெறக்கும்கிறது தெரியாதா?"

"அதெல்லாம் தெரியும்.எத்தனை வாட்டி படுத்திருக்கோம். ஆனா கண்ண தெறந்து பாக்கிறப்ப ஆளு காணாம போயிடுவாரு! மக்காய்  நாளு ராத்திரியில நடந்தத பத்தி கேப்பாரு. அப்பத்தான் புள்ள பெறக்கப்போகுதுன்னு சொல்வாரு! "

"சரி இன்னிக்கி ராத்திரி வந்தா என்னய வந்து எழுப்பிவிடு"!

அப்போது வார்டன் கம்பை தரையில் தட்டியபடியே வந்தாள்.

"கூறு கெட்ட குந்தாணிகளா? என்னடி பஞ்சாயத்து ?"என்றவாறே ஆளுக்கு இரண்டு சாத்து சாத்தினாள்,கிருக்காஸ்பத்திரி வார்டன்.

Saturday 4 March 2017

காதல்...காமம். ( 27.)

ஜட்காவில் இருந்து இறங்கியவர் தங்கராசுவின் அய்யா வடிவேலு.

"படியில கால வச்சு மெதுவா எறங்கு, மறக்காம மல்லிப்பூவை எடுத்துக்க!" மாயக்காளின் கையை பிடித்து இறக்கிவிட்டார்.

 பின்கொசுவம் வைத்து கட்டிய  பட்டுப்புடவை ,கழுத்தில் பதக்கம், இரட்டைவட சங்கிலி,கையில் தங்க வளையல்கள் ,நெற்றியில் துண்ணூறு கீற்று, மேலாக பெரிய அளவில் குங்குமம் என மகாலட்சுமியாக இறங்கினாள்.

வாசலுக்கு வந்துவிட்டவர்களை வரவேற்காமல் இருக்க முடியுமா?

பொன்னியின் அப்பா சிவனாண்டி"வாங்க..வாங்க" என்று வாய் நிறைய வீட்டுக்குள் அழைத்துச்சென்றவர் மனைவியை கூப்பிட்டார்.

"ராசு...இங்க வாத்தா..காரை வீட்டுக்காரக வந்திருக்காக" !

அப்பனின் அழைப்பு மகள் பொன்னியின் காதிலும் விழுந்தது. அதுவரை இருந்த  மன அழுத்தம் இப்போது இல்லை.கதவை முழுவதும் சாத்தாமல் இடைவெளி விட்டு அதன் வழியே என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆசை.... ஆர்வம்,!

"வாங்க..வாங்க..நல்லாருக்கிகளா?" அடுப்படியில் இருந்து வந்த ராசம்மாவுக்கு  இப்போது புரிகிறது..சம்பந்தம் பேச வந்திருக்காக!

சமுக்காளம் எடுத்து விரிக்கிறாள். வடிவேலுவும் மாயக்காளும் உட்கார்ந்தனர்.

"பொண்ணு வீட்லதானே இருக்கு? இந்த பூவ வச்சு விடுங்களேன்?" மாயக்காள் சொன்னது பொன்னிக்கு கேட்கிறது. தனக்குள் பெருகிய மகிழ்ச்சியை முகம் முழுக்க மலர விட்டுக்கொண்டாள்.

சற்று முன் மகளை காய்ச்சி எடுத்திருந்த ராசம்மாளின் குரலில் இப்போது கருப்பட்டி பாகு!

"பொன்னி...இங்க வா. பெரியவக வீடு தேடி வந்திருக்காக, வந்து கும்பிட்டுக்க!"

கதவு திறந்து வந்த பொன்னி "வாங்க மாமா..வாங்க அத்த" என்று முறை வைத்து சொல்வாள் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.  மாயக்காள் பக்கமாகவே   உட்கார்ந்து விட்டாள்.   சிவனாண்டிக்கு   சற்று கோபம்!ஆனால்  . காட்டிக் கொள்வதற்கு அது நேரமில்லையே..  "சரி... ஒரு முடிவோடுதான் காரை வீடு வந்திருக்கு!"

"என் செல்லம். பூ வச்சுக்கத்தா " என்று மாயக்காள்   நீட்ட " நீங்களே வச்சு விடுங்கத்தே!" என்று வாகாக உட்கார்ந்து கொள்கிறாள் பொன்னி !. "அந்த மீனாச்சியை பார்த்த மாதிரி இருக்கு!"

பொன்னியின் கன்னம் தடவி திருஷ்டி கழித்ததும் பொண்ணுக்கு  பூரிப்பு பொங்குகிறது..

"நல்லது தாயி! நீ ஒன் ரூமுக்கு போ! நாங்க பெரியவக பேசிக்கிறோம்."என்று பொன்னியை அனுப்பிவிட்டு ராசம்மாவை பார்த்தாள்.

"அத்தாச்சி! இன்னிக்கி நல்ல நாளு!முன்னாடியே ஏதும் சொல்லிக்காம திடுதிப்புன்னு வந்து நிக்கிறாகலேன்னு வருத்தம் கிருத்தம் பட வேணாம்,எங்களுக்கு ஒரே புள்ளதான்.பெரிய படிப்பு படிச்சிருக்கான்.ஒங்க மவளைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டான். எங்களுக்கு வயலு வாய்க்காலுக்கு குறைவில்ல.பாட்டன் சொத்து அப்பன் சொத்துன்னு ஆளப்போறவன் அவன்தான்! அவனுக்குத்தான் உங்க மவளை கேட்டு வந்திருக்கோம். அண்ணனை கேட்டு நல்ல முடிவா சொல்லுங்க.!"

திடீர் என்று வந்தவர்கள் இப்படி நேரடியாகவே கேட்பார்கள் என்பது சிவனாண்டி,ராசம்மா வகையறாவுக்கு தெரிந்திருக்கவில்லை . ஒரு வேளை பொன்னி சொல்லித்தான்   வந்திருப்பார்களோ என்கிற சந்தேகமும் இருந்தது. புருசனிடம் தள்ளிவிடவேண்டியதுதான் பொறுப்பை!

"என்னங்க பொன்னியய்யா! அத்தாச்சி சொல்றதை கேட்டிகள்ல?! பொண்ணு கேக்கிறாக!"

"அது சரி! பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்டு வரத்தான் செய்வாக! ஆனா .மச்சு வீட்டுக்காரங்கன்னு தள்ளி விட்ற முடியாதுள்ள.! "

அப்பன் சொல்வதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள் பொன்னி. முடிவாக  என்ன சொல்வார் என்பதை  தெரிந்து கொண்டு  பிறகு தைரியமாக தனது முடிவை சொல்லிவிட வேண்டியதுதான்!

"உங்கண்ணன் மவனுக்கு கட்டி வைக்கனும்னு சொன்னியே..? இப்ப இந்த சம்பந்தம் வந்திருக்கு. உன் முடிவ சொல்லு?" என்று சிவனாண்டி ஒரு வெடி குண்டை வீசுவார்  என்பதை அவரது குடும்பமே எதிர்பார்க்க வில்லை! இல்லாத முறைப்பையனை  அய்யன் இறக்குவதால் அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது  பொன்னிக்கு!

"ஆத்தாளின் அண்ணனுக்கு பொம்பள புள்ளதானே இருக்கா? பச்ச பொய்யை அய்யன் சொல்றதை பார்த்தா இந்த சம்பந்தம் பிடிக்கலேன்னுதானே அர்த்தம்.நாடகம் ஆடுறார் சிவனாண்டி.இதுக்கு ஆத்தா என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.அப்புறம் ஏறக்குவோம் அருவாளை ! "மனசுக்குள் பொன்னி சொல்லிக்கொண்டாள்.

ராசம்மாவுக்குத்தான் இப்ப சிக்கல்! என்னத்த சொல்றது?

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்துப்  புனையப்படுகிற  தொடர்  இது. ராசம்மா என்ன சொல்லப்போகிறாள்  என்பதை  அடுத்துப்  பார்க்கலாம்,