Thursday 30 March 2017

என் மனைவி எடம் காலி...!

"என்னடா  தலைவர்  வீட்டுக்கு முன்னாடி வரிசை கட்டி நிக்கிறானுங்க?"

"அதை ஏன்டா  கேக்கிற ? நேத்து மப்புல பொதுகூட்டத்தில  பேசுற போது  என் மனை எடம் காலியா இருக்கு. கூட்டம் போடுறதுக்கு வசதியா இருக்கும் .அப்ளை பண்ணுங்கன்னு   பேசுறதுக்கு பதிலா மனைவி எடம் காலியா இருக்குன்னு அப்ளை பண்ணலாம்னு  பேசிட்டாரு.அதான் அவனவன் ஜாதகத்தை தூக்கிட்டு வந்து வரிசைல நிக்கிறானுக! "

"அய்யயோ...அப்ப வீட்டம்மா சும்மாவா இருக்காங்க ?"

"வரி வரியா தலைவர்  முதுகுல அம்மா கோடு போட்டாச்சு!" 

**************************************************

"உங்க பையன் பரீட்சையில எப்படி எழுதி இருக்கான்?"

"பார்த்துதான் எழுதிருக்கேன்.சென்டம் ஷ்யூர்னு சொல்றான்!"

"எனக்கு பொறந்த பயபுள்ள படிச்சுட்டுதான் எழுதிருக்கேன்.ஸ்டேட் பர்ஸ்ட் வரும்கிறான்.யாரை நம்புறது?"

************************************************************

"பெண்டாட்டிய விட பேயே பெட்டர்னு சொல்றியே ஏன்டா"?

"பேய்க்கு  சமைக்க தெரியாது.லேட்டா போனாலும் அடிக்காது."

**************************************************

" சம்மருக்கு எங்க போகப்போறே?"

"மச்சினன் குடும்பத்தோடு வர்றதா லெட்டர் போட்ருக்கான். அதான் நான் வேலூருக்கு போறதா பதில் எழுதிருக்கேன்."

"அது வெயில் நகரமாச்சே!"

"அப்பத்தானே  ப்ரோகிராமை கான்சல் பண்ணிட்டு ஊரோடு கெடப்பான்.!" 

***************************************************

"என்னடா மந்திரி செம காண்டுல இருக்காரு?"

"அஞ்சா சிங்கமே வருகன்னு எழுதுறதுக்கு பதிலா கஞ்சா சிங்கமே வருகன்னு பிளக்ஸ் வச்சிட்டாய்ங்கலாம்! வாட்டி வதக்கி எடுக்கிறார்.!"

********************************************






 

No comments:

Post a Comment