Monday 6 March 2017

கேண சிறுக்கி கோணலா போட்ட கோலம்!

"சக்கர பொங்கல் வைக்கிறேன்னு புளியோதரை கிண்டுனவதானே நீ! எட்டுப் புள்ளில கோலம் போடுறேன்னு வாச முழுக்க கிறுக்கி வச்சிருக்கியே ..என்னடி  விசேசம்?"

"நான் குளியாம இருக்கேன் அத்தே! தீட்டு நின்னு அஞ்சு நாளாச்சு! "

"கேணச்சிறுக்கி! ஒவ்வொரு மாசமும் இதயே சொல்லிட்டிருக்கே..வயறுதான் உப்ப மாட்டேங்கிது! ஏண்டி..வெளங்காத சிறுக்கி. ஒம் புருசன்தான் சிங்கப்பூரில் கெடக்கிறானே.அப்பறம் எப்படிடி மாசமா இருப்பே?"-- அத்தைக்காரிக்கு செம கோபம்.புருசன் வெளிநாட்டில் இருக்கிறபோது இவ ஒவ்வொரு  மாசமும் இப்படி சொல்லிட்டு திரியிறாளே!வயத்தில கோளாற வச்சிக்கிட்டு இந்த சிறுக்கி மருத்துவச்சியையும் பார்க்காமல்... ச்சே  என்ன பொண்ணு இவ? அப்பிராணியா ,பாம்புராணியா?

"  ஏண்டி மானங்கெட்ட மல்லாரி. புருசன் கூட சேர்ந்து படுத்தாதான் புள்ள பெறக்கும்கிறது தெரியாதா?"

"அதெல்லாம் தெரியும்.எத்தனை வாட்டி படுத்திருக்கோம். ஆனா கண்ண தெறந்து பாக்கிறப்ப ஆளு காணாம போயிடுவாரு! மக்காய்  நாளு ராத்திரியில நடந்தத பத்தி கேப்பாரு. அப்பத்தான் புள்ள பெறக்கப்போகுதுன்னு சொல்வாரு! "

"சரி இன்னிக்கி ராத்திரி வந்தா என்னய வந்து எழுப்பிவிடு"!

அப்போது வார்டன் கம்பை தரையில் தட்டியபடியே வந்தாள்.

"கூறு கெட்ட குந்தாணிகளா? என்னடி பஞ்சாயத்து ?"என்றவாறே ஆளுக்கு இரண்டு சாத்து சாத்தினாள்,கிருக்காஸ்பத்திரி வார்டன்.

No comments:

Post a Comment