லெட்டர் எழுதி ரொம்ப நாளாச்சுடி கண்ணே. என்ன திடீர்னு பாசம் பொங்கறதுன்னு கேக்கிறியா? சுசி லீக்ஸ் டுவிட்டர்ல பார்த்தேன். அப்புறம் ஹைதராபாத் சினிமா விழாவுக்கு வந்த நடிகைகளை பார்த்தேன். எல்லாமே அரைகுறைதான்! எதை மறைக்கனுமோ அதெல்லாம் மொசக்குட்டி மாதிரி தலையை நீட்டுது. அப்படி வந்தாதான் நாகரீகமாம். எழவெடுத்தவன் எவன் சொன்னான்னு தெரியல,இப்படி வந்தா எவனுக்குடி ஆசை வராது?தாவி வருவானா மாட்டானா?
கிஸ் அடிக்கிற படத்துக்கு இப்பல்லாம் தடை இல்ல.அதல்லாம் பார்க்கிற போது ஆம்பள பயலுகளுக்கு உதடெல்லாம் நமச்சல்.ஒரு தல காதல்னு ஆளை தேடுறான்.போடா பொறுக்கின்னு செருப்பை காட்டுனாலும் உன்னோட சேவடி பட்டதாச்சே..போடு வாங்கிக்கிறேன்னு குனியிறான். இந்த குனியிர பழக்கத்தை கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்! கூனல் விழுந்த பயலுக மாதிரி அந்தம்மா காருக்கே கும்பிடு போட்டு வழி காட்டிட்டு பழக்கத்தை மாத்த முடியாம இப்ப எந்தெந்த ஜீவராசிகளுக்கோ குனியிரானு ங்க. தப்பித்தவறி கோவிலு காளைகள் கண்ணுல மாட்டிரக் கூடாதுன்னு பகவா னை வேண்டிட்டிருக்கேன்.
இதெல்லாம் பார்க்கிறவனுக்கு பொண்டாட்டி மேல ஆசை வரத்தான் செய்யும்.வேலை விட்டு வீட்டுக்கு போனவனுக்கு நோக்கமெல்லாம் அதாத்தான் இருக்கும். போறபோதே ரெண்டு மொளம் மல்லிப்பூ வாங்கிட்டு போவான்.அவ தலையில ஆசையா வச்சு விட்டு காதோரமா முகத்தை கொண்டு போனா ஏழேழு ஜென்மம் புண்ணியம்டி!
அதான் சுவர்ச்சலா ...உனக்கு லெட்டர் எழுதினேன்.
இப்படிக்கு உன்னுடைய கணவன்,
குரங்கார்.
No comments:
Post a Comment