Saturday 20 January 2018

ஞானப் பார்வை. ஆர்.கே.நகர்.1

ராதாகிருஷ்ணன் நகர்.சென்னையின் அடர்த்தியான பகுதி. பஞ்சை பராரியில்  இருந்து கோடிகளில் கொழிக்கும் கோமான்கள் வரை இங்கு  வாழ்கிறார்கள். கோபம் வந்தால் கொலைதான் தீர்வு என்கிற நம்பிக்கையுடன் வாழ்கிற 'குடிமகன்'கள் கோலோச்சும் அரசியலுக்கும் பஞ்சம் இல்லை.. மாநகரத்தின் மரியாதையான 'காதலர்கள், பக்தர்கள்,ஓடிவந்தவர்கள்,ஓடிப்போக காத்திருப்பவர்கள்,என பலப் பல அடையாளங்கள்.

" என்ன இன்னிக்கி 'ப்ரீ'யா?"

"இன்னாய்யா,நெக்கலா? காசு இருந்தா எப்பவுமே உள்ளாற வா. இல்லேன்னா  பீச்சாண்ட போ.பிரியாமே ..ப் ரீ.?"

"என்ன ஜக்கு இப்படி கோச்சுக்கிரே...சும்மா இர்ந்தேன்னா மாபலிபுரம்  போலாமேன்னுதான் கேட்டேன்.நீ என்ன பொடவையா, ஆடித் தள்ளுபடிலே  வாங்கறதுக்கு.!ஒந்தொளிலுக்கு இவ்ளோ  கோவம் வேணாம் புள்ளே!"

"சாரிய்யா! குஜாலா பேசிட்டு வர்றவனுக செல பேமானிங்க அவுத்ததும்  கத்திய காட்டிடறானுங்க.என்னோட வலி எனக்குத்தான்யா   தெரியும்! விக்ஸ்  தேச்சு போற நோவில்ல சாரு!"

இப்படி சில உரையாடல்.

இன்னும் சில வீட்டுக்குள்...

"இன்னிக்கி வெளில போலாமா? அஞ்சு நாள் கிச்சன்.ஒருநாள் வெள்ளி மட்டும்  அத்தை கிச்சனுக்குள் விட மாட்டாங்க! சென்னை எப்படி இருக்குன்றத இந்த ஞாயித்துக்கெழமையாவது காட்டுங்களேன்?"

"பாவம்தான் சரசு! பூட்டிக்கெடக்கிற கடைய பாத்து என்ன தெரிஞ்சிக்கப் போற? எனக்கும் ஒன்னோட சுத்தனும்கிற ஆசை இருக்காதா? கோவிலுக்கு போகணும்.காம்ப்ளக்ஸ்  தியேட்டர் போகணும்.பீச் போகணும்னு எவ்வளவோ  இருக்கு சரசு.( பெருமூச்சு.) துணிக்கடையில் கிளார்க் வேல.!என்னால என்னம்மா பண்ணமுடியும்? ஞாயித்துக்கெழமை ராத்திரி சந்தோசம் மட்டும் வாழ்க்கைன்னு நெனைக்கிற ஆம்பள நானில்ல?"

"என்னங்க .. ? நா அப்டி நெனக்கிறவளா? அருப்புக்கோட்டைய்ல பெறந்தவ இன்னிக்கி பட்டணத்து மருமக.விடுங்க.இன்னொரு நாளைக்கு சினிமாவுக்கே  போலாம். இன்னிக்கி டி.வி.போதும்!"

மற்றொரு குடும்பம். அல்ட்ரா மாடல்.கணவன் ஒரு ஆபிசில்.மனைவி மற்றொரு ஆபிசில். லஞ்ச் டைமில் போனில் உரையாடல்!

"என்னடி ரம்யா! இன்னிக்கி மாம்யா மருமக 'பைட்'டா? லஞ்ச் படு சொதப்பல். காரம் தூக்கல்! அம்மாவ அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயேன்?"

"இத உங்க ஆத்தா கிட்ட நீ சொல்லேன்? இன்னிக்கி காலம்பர என நடந்தது தெரியுமா? உங்கிட்ட சொல்லலாம்னுதான் நெனச்சேன் ! பட் ஆபீஸ் கெளம்பற நேரத்தில கரச்சல் வேணாமேன்னுதான் விட்டுட்டேன் .நைட் ஒரு மணி வரை  ஏன் கூத்தடிக்கிறிங்க,அப்டி  அடிச்சும் என்ன கெயின்னு கேட்கிறாங்க.?என்ன டைப் டா உங்கம்மா?"

"என்ன ரம்யா சொல்ற? இப்ப பக்கத்தில யாரும் இல்லியே?"

"நா  தனியா வந்துதான் பேசறேன்?  படுக்கிறத பத்தி உங்கம்மா என்னடா கொஸ்டின்  பண்றது ? இங்க கிள்ளுனான் அங்க கிஸ் பண்ணுனான்னு சொல்லனுமா ?ஏன் கூத்தடிக்கிறேன்னு கெழவி கேக்கிறா......பிள்ள எப்ப பெத்துக்கறதுன்னு எனக்கு தெரியாதா?.

"பொங்காதே ரம்யா...கூல்! அம்மாட்ட நான் பேசறேன்."

இப்படியும் சில..மேலும் பல.ஆனாலும் நம் கதை இது அல்ல.

அதோ தெரிகிறதே ஒரு காம்பவுண்டு..அந்த காம்பவுண்டுக்கு பொதுப் பெயர் உண்டு.சிங்காரவேலன் காம்பவுண்டு. அந்த காம்பவுண்டில்தான் கதை தொடங்குகிறது.
-------இன்னும் வரும்.


No comments:

Post a Comment