Monday 15 January 2018

ரஜினியை வளைக்கிறது பாஜக.!

சட்டசபை தேர்தல்  வரும்போது கட்சியை ஆரம்பிப்பேன்  என உத்தேசமாக  சொன்னதற்கே தமிழ்நாட்டில் பலர் தலைகீழாக நடக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த சி.எம். தலைவர்தான் என்கிற அளவுக்கு ரசிகர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடிவிட்டார்கள்.ஆனால்
பஸ்கள் ஓடாமல் தமிழ்நாட்டு மக்கள் மூச்சு முட்டிக்கிடந்தபோது ரஜினி வாயை திறக்கவில்லை. விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சொல்லிவிட்டார்.இதற்கும் வாயைத் திறக்கவில்லை. இப்படி தமிழ்நாட்டு பிரச்னை பற்றி எதுவுமே சொல்லாமல்  மன்றத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால்
அவருடைய இரண்டு படங்களையும்  ஓட வைப்பதற்குத்தான் அரசியல் பிரவேசம் என சிலர் சொல்லி வருவதை  குருமூர்த்தியின் கூற்று பொய்யாக்குகிறது.ரஜினியின் பிரவேசம் உறுதியாக நடக்கும் என நம்பலாம்.
      ரஜினியின் அரசியல் பிரவேச ஐடியாவுக்கு மூளையே மோடி தான் என்பது  தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிஇருக்கிறது .பிஜேபியின் மதவாத அரசியலுக்கு  கவுரவ தூதராக இருக்கப்போகிறார் ரஜினி என்பது உண்மையாகிவிடும் போலிருக்கிறது.
வரப்போகிற தேர்தலில் ரஜினியுடன் பிஜேபி கூட்டு சேரவேண்டும் என்று குருமூர்த்தி சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் அதிமுக மேலும் பிளவு அடையப்போகிறது.அவர்களுக்கு எதிரான வழக்குகள் வலு பெறப்போகிறது என்றுயூகிக்கலாம்இப்படி பாஜக தங்களை பலவீனப்படுத்தினால் பிளவுண்ட அதிமுக ஓரணியில் நிற்க வேண்டிய நிலைவரும் என்பதாகவும்  கருதலாம்
.

No comments:

Post a Comment