Tuesday 3 May 2016

நடிக்க மறுத்த நயன், காஜல், இலியானா...என்னடா சோதனை!

சின்னதாக  உறுமினாலும் அந்த காடே  அலறி நடுங்குமாம். அப்படி ராஜாவாக  வாழ்ந்த சிங்கத்துக்கு   வயசாகிப் போனதால் எலி கூட  மேலேறி  என்ன மச்சான் என்று உறவு கொண்டாடுமாம். என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா எப்படியெல்லாம்  வாழ்ந்தவர், அவருடன்  நடிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை சொல்ல முடியுமா? மொத்த  தெலுங்கு இண்டஸ்ட்ரியே  அந்த நடிகைகளை  பாய்காட் பண்ணி பார்சல் பண்ணி அனுப்பி விடாதா?

பாவம்தான்! வயசாகிப் போச்சு.முன்னைப்போல வேட்டை ஆட உடம்பில  தெம்பு இல்ல. இருந்தாலும் ஆசை விடல. விடலைப் பொண்ணுகளுக்கு  குறி  வைத்தால் 'சீ யூ லேட்டர் சார்" என்று  சல்யூட் அடித்துவிட்டு  கழன்று கொள்கிறார்கள்.

டைரக்டர் கிரிஷ்  முதலில் நயன்தாராவை  அணுகி கதையை சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு 'தமிழ்ப்படங்களுக்கு  கால்ஷீட்டை பிரிச்சு  கொடுத்திட்டேன்.சாரி சார்!"என்று நழுவிவிட்டார்.

அவர்தான் நம்பர் ஒன் நடிகை.அப்படி சொல்லிவிட்டார்.இந்த காஜலுக்கு  வந்த வாழ்வைப்  பாருங்களேன்.வேணாம் சார்னு  ஓடியே போய்விட்டார், இவராவது  பரவாயில்லை. இலியானாவுக்கு கதை பிடித்துவிட்டது, ஆனால் இளம் ஹீரோயின் வேஷம் இல்லை.சற்று  முதிர்ச்சியான வேஷம் என்றதும்  அவரும் கதவை  மூடிவிட்டார்,

மே மாதம் ஷூட்டிங்! பாரின் போயாக வேண்டும். பாலகிருஷ்ணா என்ன சொல்வாரோ என்று டைரக்டர் கிரிஷ்  தலை கீழாக  நிற்கிறார். வேட்டையில்  சிக்குவதாக இல்லை. ராய் லட்சுமியை  கேட்டுப்பார்க்கலாம். அவர்தான்  ஜூலி பார்ட்  டூ படத்துக்காக  ஜிம் போய் சிக்கென  மாற முயற்சிக்கிறார்.

"உடம்பு காட்டி நடிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் ஜூலி இரண்டில் நடிப்பில்   பின்னி எடுக்கப்போகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.;

   

No comments:

Post a Comment