Monday 2 May 2016

பெரிய நடிகருக்கு 'இது 'அழகா?

நமக்குத்தான்  அது தப்புன்னு படுதா?

இல்ல அப்படியெல்லாம் நினைக்காதே  இது  மாடர்ன் கல்ச்சர்  அதெல்லாம் தப்பா அவங்களே  நினைக்கமாட்டாங்க. உனக்கேன்  வயிறு  எரியிதுன்னு  சொல்வாய்ங்களா?

என்.டி.ராமாராவை  ஆந்திராவில  தெய்வமா  கொண்டாடுவாங்க,அவர்  ராமர் ,கிருஷ்ணர்  வேஷம் போட்டா  ஜனங்க  விழுந்து விழுந்து கும்பிடுவாங்க. அப்பேர்ப்பட்ட மகானுக்கு இப்படி ஒரு பிள்ளையான்னு  இப்ப  ஆந்திர சினிமா உலகத்தில  என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை  பத்தி பேசாத ஆளே இல்லேங்கிறாங்க. ஆளு  செம ஜாலியானவர். சினிமாவில் இருக்கிறவர்களுக்கு  என்னன்ன  பழக்கங்கள் இருக்கணும்னு  ஒரு எழுதாத  சட்டம் இருக்கோ அதெல்லாம்  இவருக்கும் இருக்கு.நம்ம தமிழ்ச்சினிமா மட்டும் விதி விலக்கா என்ன? அட உலக சினிமாவிலேயே  அந்த பழக்கம்  இருக்கு.ஆனா இந்திய கலாசாரத்துக்கு  சரிப்பட்டு வருமா? இப்படி சிலர்  கேட்கிறாங்க. இந்திய கலாசாரம்னு பொதுவானது ஏதாவது இருக்கா? ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலாசாரம்னு  வாழ்கிற பூமி  இது. இதில் என்ன பொதுவானது? ஒரு வெளக்கமாறும் இல்ல. அப்படி இருக்கிறபோது  என்.டி.ஆர் .பாலகிருஷ்ணா 'நாயகி" படத்தின் விழாவில் நம்ம திரிஷாவுக்கு  அசைவ முத்தம் கொடுத்தது  எப்படி தப்பாகும்.?அத அந்த அம்மாவே  தப்புன்னு  சொல்லலே என்கிறபோது  சிலபேருக்கு மட்டும் ஏன் எரியிதுன்னு  கேட்கிறேன்.நமக்கு மட்டும் ஏன் தப்புன்னு படுது? நம்ம சிம்புவும்  திரிஷாவும்  லிப் கிஸ் கொடுத்தாங்களே..அத எல்லோரும்தானே  பார்த்தோம்.

அதனால சினிமாவில அசைவமுத்தம் என்பது  பழக்கமாகிவிட்டது.அதை  தப்புன்னு சொல்லக்கூடாது  என்பது  என்னுடைய கருத்து.

இப்படிக்கு ,
குரங்கு.
தேவாரம்.

No comments:

Post a Comment