Saturday 30 April 2016

ஓம்....புல்லட் பாபா நமஹ!!!

 அது உண்மையா,புருடாவா என்பது கூட தெரியாது. ஆனால் சிலருக்கு  கும்பி  கொதித்து குடல் கருகிய வாசம் மட்டும் வந்தது. அதாவது  குஷ்புவுக்கு  கோவில் கட்டப்போவதாக  யாரோ கொளுத்திப் போட்டது  பட்டிமன்ற தலைப்பாகி  ஒவ்வொருத்தர்  வாயிலும் அரை  பட்டதே,. நடிகைக்கு  கோவிலா  என  கேட்டு  பகுத்தறிவு  பொங்கி  ஓடியதே...ஞாபகம் இருக்கா?.

ஆனால் வடக்கே  ஒரு மோட்டார் பைக்குக்கு கோவில் கட்டி நமஹா பாட்டு  கூட போட்டிருக்கிறார்கள் சாமி!. இதையெல்லாம்  பார்க்கிற போது  முட்டாள்த் தனத்தை நாம் மட்டும்  முதலீடாக  வைத்திருக்கவில்லை  என்று   ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்..!

ஜோத்பூர் மாவட்டம். பாலி என்பது ஊரின் பெயர் . இந்த  ஊரின் வழியாக ஒருவர் மோட்டார்  பைக்கில் சென்று இருக்கிறார்.திடீரென ஒரு இடத்தில்  கட்டுப்பாட்டை  இழந்து அங்கிருந்த மரத்தில் மோதிவிட்டது. பயணம் செய்தவர்  ஆன்  த ஸ்பாட்  அவுட். லோக்கல் போலீசார் வந்து  மோட்டார் பைக்கை  ஸ்டேசனுக்கு கொண்டு போய்விட்டார்கள்.முறைப்படி  என்னவெல்லாம்  செய்யணுமோ  செய்து முடித்துவிட்டார்கள்.

 ஆனால் மறுநாள் பைக்கை காணவில்லை. எவனோ ஸ்டேசனுக்கு வந்து கைவரிசையை காட்டிவிட்டானே என்கிற கோபம் போலிசுக்கு!.

ஆனால் தகவல் வேற விதமாக வந்தது. எந்த இடத்தில் ஆக்சிடென்ட்  நடந்ததோ  அந்த  இடத்தில் பைக் கிடப்பதாக சொன்னார்கள்..என்னடா இது  மாய வேலையாக இருக்கிறது  என்று குழம்பியவர்கள்  பைக்கிலிருந்த பெட்ரோலை காலியாக்கிவிட்டு மறுபடியும்  ஸ்டேசனில் பைக்கை  ஒரு சங்கிலியால் கட்டி வைத்தார்கள்.

மறுநாள்  பைக் மறுபடியும்  ஆக்சிடென்ட் ஸ்பாட்டுக்கே  போய்விட்டது.எப்படி போனது எவன் கொண்டுபோய்  அங்கே போட்டிருப்பான் என்பது  தெரியாமல்  கடவுளின் விளையாட்டுதான் என முடிவு கட்டிவிட்டனர்.

  பைக்கை அந்த  இடத்திலேயே வைத்து பூஜை பண்ணிவிட்டார்கள் .அதை புனித இடமாக்கி  திருவிழாவும்  கொண்டாடி வருகிறார்கள். பஜனை பாட்டும் ரெடி.விபத்தில் செத்தவரின் படத்தையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

இந்து புராணப்படி முப்பத்தி மூணு  மில்லியன் கடவுள்கள்  இருக்கிறார்கள். இதெல்லாம்  அடிசனல் தான். நம்ம சச்சின் டெண்டுல்கருக்கும் பிகார் மாநிலம் கைமூரில் ஒரு கோவில் இருக்குப்பு.!

இன்னும் அலசினால் இப்படி நிறைய பகுத்தறிவு  சமாச்சாரங்கள் கிட்டும்னு  நம்புறேன்.அலசுறேன்.
      

No comments:

Post a Comment