Tuesday 12 April 2016

எப்படியிருந்த கட்சி இப்படி தேஞ்சு தெருவுக்கு வந்திருச்சே...

1967-க்கு பிறகு  தேசிய கட்சியான காங்.கட்சி எத்தனையோ  அவமானங்களை தமிழ்நாட்டில்  சந்தித்தாலும்  உயிருடன் இருப்பதே அதிசயம்தான்! மக்களை  கமாண்ட் பண்ற அளவுக்கு அகில இந்திய அளவில் ஒரு  தலைமை  இல்லாததே இதற்கு காரணம்.இந்திராகாந்திக்கு இருந்த  செல்வாக்கு  சோனியாவுக்கு இல்லாததும் ஒரு காரணம்தான்.!இந்திராகாந்தியின் விரலசைவில் கட்டுப்பட்டிருந்த தமிழக தலைவர்களில் சிலர் சோனியாவின் சொல்லுக்கு கட்டுப்படுவதாக இல்லை. உதாரணமாக  ப.சிதம்பரம் ,ஜி.கே.வாசன் இன்னும் பலரை சொல்லலாம்.வாசன் வெளியேறிவிட்டார். ப.சி.உள்ளிருந்தபடியே தனக்கான கோஷ்டியை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.மேலிடம்  கெழுத்திமீனை  விழுங்கிய நாரை  மாதிரி திணறிக்கொண்டிருக்கிறது..

அண்மையில் காங்.கட்சிக்காரர் ஒருவரிடம் கட்சியின் தேர்தல் சின்னம் எதுவென கேட்டேன்.

'என்ன குரங்கு? என்னை பத்தி என்ன நினைச்சிருக்கே? நான் பெரியவர் ( காமராஜர்.) காலத்து காங்.தொண்டன். எங்கள் சின்னம் கை சின்னம்" என்றார்  வேகத்துடன்!

'கோச்சுக்காதிங்க! அந்த சின்னம் எப்படி வந்ததுங்கிற  கதை தெரியுமா?"

மவுனம்.

'பரவாயில்ல. தமிழ்நாட்டிலுள்ள  உங்கள் தலைவர்களுக்கு தெரியுமாங்கிறதே  டவுட்டுதான்! காங்,பிளவு பட்டு இண்டிகேட்-சிண்டிகேட்னு ரெண்டு பிரிவாக ஆகியதும் எதிர்கட்சிகளல்லாம்  பசுவும் கன்று சின்னத்தை  நக்கல் பண்ணினாங்க ! பசு இந்திராகாந்தி.கன்று சஞ்சய்காந்தின்னு ஏளனம்  பண்ணினாங்க. இதை மாத்தணும்னு  ஆந்திராவில் இருந்த பி.வி.நரசிம்மராவ்,பூட்டாசிங் ஆகியோருக்கு  இந்திராகாந்தி போன் பண்ணி  சொன்னதும் அங்கே  முகாமிட்டிருந்த தேர்தல் கமிஷனர் யாகியிடம் போனார் பூட்டா.நாளைக்குள் முடிவேடுத்தாகவேண்டும்.என்கிற நெருக்கடி. யானை,சைக்கிள் ,கை, இந்த மூன்றில் ஒன்னை செலக்ட் பண்ணும்படி  யாகி  சொல்லிட்டார்.

இந்திராவிடம் பேசினார் பூட்டா.அவருக்கு இந்தி உச்சரிப்பு அவ்வளவாக  சரியாக இருக்காது. 'ஹாத் தீக் ரேஹா?' என்று  போனில் கேட்கிறார்  பூட்டா. அதாவது  'கை சின்னம் சரியாக இருக்குமா? என்பதை இந்திராகாந்தி ஹாத்தி  என்பதாக அதாவது யானை என நினைத்துக்கொண்டு  வேணாம்  ஹாத் ( கை.) தான் வேணும் என்று சொல்ல இருவருக்கும் பேச்சு முடிவதாக இல்லை. உடனே நரசிம்மராவ் குறுக்கிட்டு போனை வாங்கி 'கை 'என்பதை முடிவு  செய்தார். இல்லையென்றால் எலக்சன் கமிஷன் முடிவு செய்த சிங்கம் சின்னம்தான் கிடைத்திருக்கும்.இந்த கதை தெரியுமா?"

' சத்தியமாக  எனக்குத் தெரியாது."என்றார் அந்த தொண்டர்.

இவருக்கு மட்டுமல்ல  தமிழகத்திலுள்ள  அரசியல் கட்சிகளின்  கொடி, சின்னம் இவைகளைப் பற்றிய  அறிவு இருக்காது.

No comments:

Post a Comment