Saturday 9 April 2016

வெட்கக்கேடு...வேறென்ன சொல்ல?

அன்புள்ள  வலைப்பூ  வாசிப்பாளர்களே..
                                             நானும்  மாங்கு மாங்குன்னு  எழுதித்தான் பார்க்கிறேன்.
அதற்கு உங்களின்  ரீ-ஆக்ஸன் என்னங்கிறது தெரியல. மடத்தனமா  இருக்கா, இல்ல  அரை லூசுத்தனமா  இருக்கா ,அல்லது  வெறுப்பாக  இருக்கான்னு  யாரும் சொல்லல. எனக்கு  ஆதரவு தெரிவிச்சு  எனக்கு பக்க பலமா  இருக்கிங்களான்னும் தெரியல. அதாங்க. பாலோ பண்றதுன்னு  சொல்றது. என்ன பண்றது  குரங்கை பாலோ பண்றதுன்னு  சொன்னால் கேலி பண்ணுவாங்களே... ஆனா என்னை விட மட்டமான  அரசியல்வாதிகளுக்கு  வாழ்த்து பாடுறதை விட  நான் ஒன்னும் கேவலமாகி விடல.!

இப்ப கூட பாருங்க.ஆட்சியில இருக்கிறவரைக்கும் மதுவிலக்கு பத்தி சி.எம். ஜெயலலிதா ஒரு வார்த்தை சொல்லல. ஆனா இனிமேல் மீண்டும்  சி.எம்.மாக  வந்தால் மதுவிலக்கு பத்தி முடிவு  எடுப்பாங்களாம். அதாவது  கோபமாக  இருக்கிற மக்களை கூல் பண்றதுக்காக  இப்படி  தூண்டில்  போட்டுப் பார்க்கிறாங்க.மக்கள் ஏமாறுவாங்களா? மண்ணள்ளி  போட்டுக்க மாட்டங்கன்னுதான்  நினைக்கிறேன்.அப்படி  போட்டுக்கிட்டா என்ன செய்ய முடியும்?பேப்பர்காரங்க எல்லோரும்  அந்த அம்மாளுக்குத்தான்  ஆதரவா இருக்காங்க. என்னமோ ஒரு பயம் அவங்களுக்கு  இருக்கு!

எலக்சன்  நேர்மையாக  நடக்குமான்னு தெரியல. அதிகாரம்  ஆளும்கட்சி  கையில் இருக்கு. எலக்சன் கமிசனும்  அப்படி இப்படிதான் நடக்கிது.ஒன்பதாம் தேதி  அதிமுக வேட்பாளர்கள்  எப்படி ஜெக ஜோதியா வாகனங்களை  திரட்டிக்கொண்டு ஊர்வலமாக போனாங்க. பார்த்திங்கள்ல.

வாசன் நிலைமைதான்  இந்தளவு  மோசமாகப் போகும்னு எதிர்பார்க்கல. எப்படிப்பட்ட  குடும்பத்து ஆளு. அதாவது  பாரம்பரிய  கட்சிக்காரர்னு சொல்லவந்தேன். அவரை கேப்டன்சார்தான்  சி.எம்.முன்னு  விதி சொல்ல வச்சிருக்கே!  அய்யா காமராஜர் பெயரை சொல்லி  அவருடைய  ஆட்சியை  தருவோம்னு  சொல்லி வந்தவர் இப்ப .....தடம்  மாறிப் போயிட்டாரே!  இன்னும் என்னன்ன நடக்கப்போகுதோ?

அதாவது  அரசியல்னா  அசிங்கம்னு அர்த்தமோ.... என்னமோ  போங்கோ!. கேப்டனை  எதிர்பார்த்து  ஏமாந்த  திமுக. அந்த தேமுதிகவையே  பொளந்திருச்சே! ஒரு பக்கம் அந்தம்மா  வெடி வைக்கிது.இந்த பக்கம் அய்யா  வேட்டு வெடிக்கிறார்.இவங்க ரெண்டு பேருக்கும்  யாரு வெடி  வைக்கப் போறாங்களோ! ஆனா அது இந்த தேர்தலில்  நடக்கிற மாதிரி தெரியல.இந்த ரெண்டு  கட்சியையும் பிடிக்காதவங்க  பல  கூறாக  பிரிஞ்சி  நிக்கிறாங்க.அவங்கவங்களுக்கு  ஆப்பு  அவங்களே  தீட்டி  வச்சிருக்காங்க. இவங்களே இப்படி இருக்காங்களே  அந்த அன்புமணி சார், சீமான் சார் இவங்கள்லாம் என்ன  ஆவாங்க.

ஆளும் கட்சி சார்பில சரத்குமார்,கருணாஸ்  இவங்களுக்கெல்லாம்  இலவச கோட்டாவில இடம் கிடைக்கும்னு  சத்தியமா யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தளவுக்கு  அம்மா கட்சி பலவினப்பட்டு கிடக்கிறதா என்ன? இப்படியும் ஒரு சந்தேகம் இருக்கு! இன்னும் எத்தனை தடவை வேட்பாளர்களை  அந்தம்மா மாத்தியடிக்குமோ? திமுக வேட்பாளர்களை  அறிவித்தபிறகு  அதுக்கு சரியான  போட்டியை கொடுக்கணுமே என்பதற்காக  அம்மா ஆளை மாத்த வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.

என்ன இருந்தாலும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்தான் சரியான போட்டி! ஸ்டாலினின் வேகத்துக்கு இறங்கியடிக்க அம்மா கட்சியில  சரியான ஆள் இல்லைங்கிறது  உண்மை! சென்னையில் வெள்ள சேதம் பார்க்க வந்த மந்திரிகள் எவ்வளவு வேகமா திரும்பி ஓடினாங்கன்னுதான் பார்த்தமே..அந்த கோபத்தை சென்னையில் உள்ளவங்க காட்டுன அளவுக்கு மத்த மாவட்டங்களில் காட்டமாட்டாங்கன்னு அம்மா கட்சி  நினைக்கிது.அரசு  ஊழியர்கள் அரசு மேல கோபமா இருக்கிறதா  சொல்றாங்க.

இன்னும் தேர்தல் வேலைகள்  முழு வீச்சுக்கு  இறங்கலே..யாரு அடுத்த முதல்வர் என்கிற போட்டி திமுக--அதிமுக  இரண்டு கட்சிக்கு இடையேதான்  இருக்குங்கிறதுதான் உண்மை. இதையும்  தாண்டி..

வேற  நடக்கலாம்னு  சொன்னா  வெட்கக்கேடு..வேறென்ன  சொல்ல?

 

No comments:

Post a Comment