Saturday 28 January 2017

காதல்....காமம்.( 22,)

தங்கராசு மட்டும் விடுவிடுன்னு அவனுடைய அறைக்குள் போகிறான்..

வெள்ளிங்கிரி பட்டாசாலையிலேயே நின்றுவிட்டான்.

"என்னப்பா எங்கிட்டோ கெளம்பராப்ல தெரியிது...மைனர் வெரசா ரூமுக்குள்ள போறத பார்த்தா சீமைக்கு போற மாதிரில்ல தெரியிது? எங்கிட்டு நோக்கம்?" --வடிவேலு கண்ணாடியை தூக்கிவிட்டுக்கிட்டு வெள்ளிங்கிரிய பார்த்து  கேட்கிறார்..

"தூரமா போகலைய்யா....சும்மா நத்தம் பக்கமாதான் போறோம். சிநேகிதனுக்கு  கல்யாணம். அதான்.ரெண்டு நாள்ல திரும்பிடுவோம்."

"ஊருப்பயலுக்கெல்லாம் நடக்கிது.இந்த கெடா மாடுக்குதான் இழுத்துக்கிட்டு திரியிது!" என்று வடிவேலு வஞ்சு முடியிற சமயமா கையில் பெட்டியுடன் வந்தான் தங்கராசு. "வாடா...பஸ்சுக்கு நேரமாச்சு." என்று வெள்ளிங்கிரியை கூட்டிக்கிட்டு புறப்பட்டு விட்டான்.

சத்திரப்பட்டியில் வெள்ளிங்கிரியின் வீடு....

வெள்ளிங்கிரியும் தங்கராசும் கயித்துக்கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். எதிரில் அடைக்கன் கையை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமுடன் நிற்கிறான்.

"ஒன்ன காப்பாத்துனது யார்னு இப்பத் தெரியிதாடா? நாங்க நெனச்சத நீ முடிச்சிட்டே..நல்லது நடந்துருச்சு. மாட்டிருந்தா சென்மமோ தூக்கோ ..? ஒரு கேடுகெட்ட சிறுக்கிக்காக நீ ஏண்டா தண்டனை  அடையணும்? அதான் காப்பாத்தி அழகர்மலையில வச்சிருந்தோம். ஒனக்கு ஒரு கலியாணத்தை  பண்ணி வச்சுடுறோம். பொண்ணும் ரெடிதான். அவளுக்கும் இஷ்டம்தான். மலையில ஒனக்கு தொணையா இருந்தவனோட தங்கச்சிதான். இன்னிக்கி மொத ராத்திரிய  அவ வீட்டில முடிச்சிட்டு விடியிறதுக்குள்ள  ஆந்த்ரா பக்கமா போய்டுங்க.ஒனக்கு தொணையா இருந்தவனும் ஒங்களோடுதான் வாரான். சின்ன ஊரா பாத்து கூலி வேல செஞ்சு  பொளச்சுங்கங்க,. சம்மதமாடா அடைக்கா?"

"நீங்க இந்த நாயிக்கி என்ன செஞ்சாலும் சம்மதம்தான் எசமான்!"

மேளதாளமில்லாம.பேச்சியாயி கழுத்தில் தாலியை கட்டுகிறான்  அடைக்கன்!.கூரைப்பொடவை தங்கத்தாலி அவளுக்கு. எட்டு மொள வேட்டி,மல்லுத்துணி சட்டை .கையில ஐயாயிரம் என அவனுக்கு! மொத ராத்திரி  குடிசைக்குள்ள,.

நாக்கை துருத்தியபடி காளியாத்தா படம்.

மதுரைவீரன்,மாரியம்மன் இப்படி துடியான சாமி படங்களை மாட்டியிருந்தார்கள் குடிசைக்குள்.! கிராமத்து சாமிகள். அவை தவிர நிறைய  டப்பாக்கள். மருந்துகள்! வைத்தியர் வீடு மாதிரி இருக்கு! ..முதலிரவுக்கான  அடையாளம்னு சொன்னா அல்வா சிலேபி பால் பூ..ஊதுவத்தி இவ்வளவுதான் அங்கிருந்தன.

பாவாடை ரவுக்கையுடன் பாய் ஓரமா உட்கார்ந்திருந்தாள் பேச்சி..அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சம்.

"என்னலா...மொத ராத்திரி அதுவுமா பயமுறுத்துரமாதிரி சாமி படமா வச்சிருக்கே.! சினிமாக்காரிக படமா வச்சிருந்தா சாராயம் குடிச்ச மாதிரி இருக்கும்ல.நெறைய டப்பா டப்பாவா இருக்கே..அதில .என்ன இருக்கு?" பயலுக்கு சந்தேகம்.

"எங்கண்ணன் நமக்காக லேகியம் வாங்கிட்டு வந்திருக்கு.. எல்லாம் பழனில வாங்கியாந்தது......அசதியா இருந்தா அதுல கொஞ்சம் தின்னுட்டு படுத்தம்னா  நல்லதாம்."வெட்கத்துடன் இப்பதான் அவனை ஏறிட்டு பார்த்தாள்.அவனோ கடுப்புடன் பேசினான்.

"கெழட்டு பயன்னு நெனச்சிட்டானா ஒங்க நொண்ணன். ? ஒன் இடுப்ப பத்திரமா பாத்துக்கடி..கலப்ப புடிச்சு உழுத கையி. காச்சுப்போயி கெடக்கு."

அண்ணனை குத்தம்  சொன்னா  தங்கச்சிக்கு பொறுக்குமா?

''பேச்சுல காட்டாத மச்சான். செஞ்சு காட்டு. மூச்சு வாங்கப்போறது நீயா நானாங்கிறத மூணாம் சாமத்துல பாத்துறலாம்..இப்ப சிலேபி வேணுமா அல்வா வேணுமா?"---அவ அவசரம் அவளுக்கு!

"அதெல்லாம் வாணாம்  மொதல்ல .லவுக்கைய அவுத்துப்போடு!"

"அதென்ன சீமைய்ல இல்லாததா? அளந்தா பார்க்கப் போற. மொதல்ல வெளக்க  அமத்து. நான் லவுக்கைய  அவுக்குறேன்."

"கருப்பா இருந்தாலும் கெட்டியாதான்லா இருக்க.! கருவ மரம் மாதிரி."

"அய்யாமாருக சொன்னத மறந்துட்டியா மச்சான்.கருக்கல்ல எந்திரிச்சி போகணும்னு சொன்னாகள்ல. நீ பேசியே .....! ஒன்னால முடியுமா முடியாதா..இல்ல நான் ஆரம்பிக்கவா?"

பய வேகமாக வெளக்க அமத்திட்டு  அவ மேல படர்கிறான் .

அவ மென்னுட்டிருந்த வெத்தல செல்லம் இப்போது அவனது வாயில்!

இன்னும் வரும். உண்மை நிகழ்வை  புனைந்து  எழுதப்பட்டு வரும்  தொடர் இது. 



No comments:

Post a Comment