Tuesday 7 February 2017

குருவம்மாளும் செங்காந்தள் பூவும்!

"குருவம்மாள்னு பேரு வச்சிருக்காங்களே ...குலதெய்வத்தின் பேரா?"

வகுப்பிலிருந்து வெளியேறியதும் ஸ்ரீதர் கேட்டது இதைத்தான். என்னமோ  தெரியவில்லை. இத்தனை நாள் பழகி இருந்தும் இன்றுதான் அப்படி கேட்டான்..

ஒரு நொடி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு " எதுக்காக இப்ப இந்த கேள்வியை  கேக்குறே?" என்று மெலிதாக சிரித்தாள். மேலே போட்டிருந்த சால்வையை முன்பக்கமாக நன்றாக விரித்து விட்டுக் கொண்டாள்.அவள்  வழக்கமாக அப்படி செய்வதுதான். இருந்தாலும் அந்த நேரத்தில் தன்னுடைய  கேள்வி அவளை டிஸ்டர்ப் பண்ணிவிட்டதோ? அவளுக்கு தன்னை எந்த வகையிலும் கவர்ச்சியாக காட்டிவிடக்கூடாது என்பதில் அக்கறை உண்டு.

"சும்மாதான்..!" இழுத்தான் ஸ்ரீதர்.

"ஏன் இழுக்கிறே...காலேஜில் படிக்கிறவ இப்படியொரு  பேரை  வச்சிருக்காளே..
பட்டிக்காட்டுத்தனமா இருக்கேங்கிற டவுட்தானே ?"

"அல்ட்ரா மாடர்னா டிரஸ் பண்றே..இங்க்லிஸ்ல ப்ளுயன்ஷி..காலேஜ்ல  நீதான் அழகி. எல்லோரும் உன் மருதாணி போட்ட விரல்களை பார்த்து  கவிதை படிக்கிரானுக.செங்காந்தள் விரல்கள்னு புகழ்றானுக. நீயோ குருவம்மா குப்பம்மான்னு சேரி ரேஞ்சுக்கு பேரு வச்சிருக்கியே...பேரை  மாத்தி இருக்கலாமேன்னு தோணுச்சு! ஸ்டைலிஷா பேரு இருந்தா  உன் பியூட்டிக்கு இன்னும் தூக்கலா இருக்குமே....அதான் குரு அப்படி கேட்டேன்?"

"செங்காந்தள்  பூவை பார்த்திருக்கியாடா?"

"இல்ல,! தமிழ் வாத்தியார் சொல்ல கேட்டிருக்கேன். அவ்வளவு செவப்பா இருக்குமாம்.!"

"கரெக்ட். ஆனா அந்த பூ ..ஒற்றை விதை தாவரத்தை சேர்ந்தது. ரோடு சைடில, வேலி ஓரம்னு இருக்கும்.விரல்களை மாதிரியே நீளம் நீளமா இருக்கும்.!.கார்த்திகை மாசம்தான் மலரும். அந்த பூவிலிருந்து  தண்டு ,வேர்னு எல்லா பார்ட்ஸ்சுமே பாய்சன்! அந்த மாதிரிதான்  என் விரல்களும் பாய்சன்னு சொல்றியா?"

ஸ்ரீதர் ஆடிப்போனான்..

"அய்யோ  அப்படியெல்லாம் இல்ல.குரு! தெரியாம சொல்லிட்டேன்.பசங்க கவிதை படிச்சப்ப அது மல்லிகை, முல்லை மாதிரி இருக்கும்னு நெனச்சிட்டேன். சாரி..குரு!"

"நீ எதுக்குடா பீல் ஆகுறே? ஆனால் அந்த பூவின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி வைத்தியங்கள்ல மருந்தா பயன்படுது.! அதனால் பேரை வச்சு எதையுமே ஜட்ஜ் பண்ணக்கூடாது ஸ்ரீதர். சரி என் பேரை பத்தி இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணினதுக்காக நீதான் காப்பி ஷாப் கூட்டிட்டு போறே? ஓகே?"

"வித் பிளஷர்."
.

No comments:

Post a Comment