Sunday 25 December 2016

காதல்..காமம்.( 17.)

வானம் குமுறிக் கொண்டிருந்தது. பலத்த மழை வருவதற்கான  அறிகுறி.

செல்லத்தாயி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள்.

"ஐயா ,வடிவேலு அவர் பையனுடன் வந்திட்டிருக்காருங்க." கான்ஸ்டபிள் ஸல்யூட் அடித்துவிட்டு அவரின் வேலையைப் பார்க்க போய்விட்டார்.

"வீட்டுல போயி பேயாட்டம் போட்டியா.?" சப்- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

பதறிப்போனாள் செல்லத்தாயி.

"ஐயோ சாமி...நான் கம்முன்னுதான் இருந்தேன்.அவரு பொண்டாட்டிதான் .மண் அள்ளி தூத்தாத குறையாக வஞ்சு  சாபம் கொடுத்துச்சு!"

"பின்ன... ஆலாத்தி எடுத்து உள்ள வாடின்னா....உன்ன கூப்புடுவாங்க...?" என்று  சப்இன்ஸ்பெக்டர் நக்கலாக சொல்ல ,  அதே சமயத்தில்வடிவேலு  ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். பின்னாடியே  தங்கராசுவும் வந்தான்.

குமுறிக்கொண்டிருந்த வானம் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

"வாங்க..வடிவேலு..." என்ற எஸ்.ஐ. சற்று  கடுமையாகவே விசாரணையை  தொடங்கினார்.

"இந்த பொம்பளை யாருன்னு தெரியிதா?"

"எங்க  வயக்காட்டுல வேலை பார்க்கிற செல்லத்தாயிங்க!"

சிரிக்கிறார் எஸ்.ஐ.

"வேலை பாக்கிறவளா? என்னய்யா சொல்றே. அவ ஒன்னோட  வைப்புன்னு  சொல்றா! வைப்பா? ஒய்பா? சொல்லுமய்யா?"

"..............................!"

"வாயை தொறந்து சொல்லும். அவளும் நீயும் ஒண்ணா படுத்திருந்தப்ப  கொரவளையை நெரிச்சு கொல்ல பாத்ததாக கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கா. அவ ஒம்மோட வப்பாட்டியாம்.நத்தத்தில இருக்கிற வீட்டை அவ பேருக்கு  எழுதி கொடுத்திருக்கிறீர்.ஆனா வயக்காட்டில வேல பாக்கிறவளா சொல்றீர்?ஒனக்கு இருக்கிற  வசதிக்கு எத்தனை வப்பாட்டியும் வச்சுக்கலாம். ஆனா  அவள ஏன்யா கொலை செய்ய பாத்தே?"

"சத்தியமா  அவள கொல்ல பாக்கலைங்க. பொய் சொல்றா தேவடியா முண்டே!"

"ஏங்கானும்...அந்த பொம்பளைய எந்த உரிமைய்ல அப்படி வய்யிரே? ஒங்கூட  படுத்தவங்கிற திமிர்லதானே ? களை எடுக்க வந்தவ அவ புருசன  விட்டுட்டு  ஒங்கூட வந்திட்டான்னா ....நீ ஆசை காட்டாம அவ்வளவு பெரிய தப்பை  பண்ணிருப்பாளா? சொல்லுய்யா? ஒண்ணை மாதிரி வசதியானவனுங்க ஏழை பாளைகளதான்யா குறி வக்கிறிங்க. களை எடுக்க வந்தவ வசதி இல்லாதவ  அவ புருசனும் அடக்கப்பட்ட சாதிங்கிறதால....காசு பணம் இல்லாதவங்கங்கிற  காரணத்தால ஒண்ணும் பண்ண முடியாதுங்கிற ஒங்க சாதி திமிரை காட்டுறிங்க.அவள கொலை பண்ணிட்டா  பணம் செல்வாக்க பயன் படுத்தி  தப்பிச்சிக்கலாம்கிற எண்ணம்,அவள அனுபவிச்சிதுமில்லாம கொல்லவும் பாத்திருக்கிறே? ஒம்மகன் வளந்து கல்யாணம் பண்றதுக்கு காத்திருக்கான். இந்த வயசில எதுக்குயா எழவெடுத்த காரியத்தை பண்ணிருக்கே?"

"அய்யா...அவ என் தொடுப்புதான். ஒத்துக்கிறேன்.மனசோடு வீட்டை எழுதிக் கொடுத்தவன் எப்படியா கொல்ல மனசு வரும்? அவ வீட்டுக்குப் போயி ரொம்ப நாளாச்சு...பொய்யி சொல்றா. மொட்ட கோபுரத்தான் சாமி மேல சத்தியம் பண்ண சொல்லுங்க..பாண்டி முனி மேல சூடம் அணச்சு சத்தியம் பண்ணுவாளா? கேளுங்க."  ---தலை கவிழ்ந்தபடியே கேட்கிறார் .

"செல்லத்தாயி...சத்தியம் பண்ணச்சொல்றாரு...பண்ணுறியா?" எஸ்.ஐ. அவளிடம் கேட்டார்.

"இனிக்க இனிக்க பேசி என்ன அனுபவிச்சிட்டு இப்ப சத்தியம் பண்ண சொல்றியா?"--செல்லத்தாயி இப்ப வடிவேலுவை பார்த்து நேரடியாக பேச ஆரம்பித்து விட்டாள்." கோழி அடிச்சு போடு...ஒன் கை ருசி அவளுக்கு வராதுன்னு சொல்லி மத்தியானமே வந்து படுத்தியே...அன்னிக்கி ராத்திரி வீட்டுக்குப்  போகாம என் காலடியே கதின்னு அனுபவிச்சியே...அதெல்லாம் பொய்யா? சத்தியம் பண்ணுவியா? நிரோத்து இல்லாம படுக்கிறதுக்கு என்னய்யா  காரணம் சொன்னே? ஞாபகம் இருக்கா? பிச்சிப்பூ வாங்கிட்டு வந்து கொண்டைய்ல வச்சு விட்டுட்டு ....வெக்கத்த விட்டு சொல்றேன்....என் மாருக்கு நடுவுல மொகத்தை வச்சு கொஞ்சுனியே.." என்று அவள் சொல்லியதை கேட்க முடியாமல்  தங்கராசு வெளியே செல்கிறான்.

மழை விட்டபாடில்லை. உள்ளே செல்லத்தாயி வெளிப்படையாக பேச முடியாததை எல்லாம் வெட்கத்தை விட்டு சொல்லிக்கொண்டிருக்கிறாள். வடிவேலுவின் தலை கவிழ்ந்து கிடக்கிறது. மானமோ  ஏலம் போய்க்கொண்டிருக்கிறது.

"செல்லம்...என்ன இருந்தாலும் நீதாண்டி எனக்கு எல்லாமேன்னு ஆயிப்போச்சு.இனி என்னடி தொடுப்பு வைப்புன்னு? என் ராசாத்தி நீதான்னு கண்ணிர் வடிச்சியே இல்லேன்னு சத்யம் செய்வியா...செத்த பெறகு உரிமையோடு வந்து நில்லுடின்னு இந்த மஞ்ச கயிரை கட்டுனியே..பொய்யா?" தாலியை எடுத்துக் காட்டுகிறாள். "இத்தனை மாசம் கழிச்சு  இந்த கயிரை கட்டுறியேன்னு கேட்டதுக்கு 'தப்புத்தாண்டி செல்லம்'னு கொஞ்சுனது மறந்து  போச்சா?" என்று தொடர்ந்து அவள் சொல்லிக்கொண்டே போக எஸ்.ஐ.இடை மறித்தார்.

"ஒங்க ராத்திரி அனுபவத்த சொன்னதெல்லாம் போதும்.சத்தியம் யாரும் பண்ண தேவை இல்ல.கம்ப்ளெயிண்ட் மேட்டருக்கு வாங்க! வடிவேலு ! என்னய்யா சொல்றே? கொரவளையை நெரிச்சியா...ஏன் கொல்ல பாத்தே..சொன்னா மரியாதை ..இல்லன்னா...?"

"சத்தியமா அவள கொல்ல பாக்கல..நெனைக்கவும் இல்ல. அவ பொய் சொல்றா! என் வழியா அவளுக்கு ஒரு பிள்ளை வேணும்னு கேக்கிறா..அதான்  உண்மை. இந்த உண்மை என் வீட்டுக்கும் தெரியும். நான் முடியாதுன்னு சொன்னதுக்குத்தான் என்ன இப்படி சந்தி சிரிக்க வைக்கிறா! அவ கிட்டய கேளுங்க" என்று வடிவேலு சொல்லியபோதுதான் அங்கு வெள்ளிங்கிரி  வருகிறான்.

"ஏண்டா..வெளில நிக்கிற?" என்று தங்கராசுவையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.

மற்றது  அடுத்த வாரம். உண்மை  சம்பவம் இங்கு புனைவுக் கதையாக  தொடர்கிறது.

No comments:

Post a Comment