Sunday 20 March 2016

குரங்கு பயலுக...

வணக்கம்ணே,
                       வம்பு தும்புன்னு இருந்தாதான்  எங்க இனத்துக்கு மரியாதை. இப்ப கோவிலுக்கு வர்றவங்க கையில தேங்கா,பழங்கள்  கொண்டு வந்தால் அதை  பறிச்சு தின்றது எங்க குல வழக்கம், ஆனா இந்த மனுசனுங்க  அடுத்தவன் சொத்தை பறிச்சு அமுக்குறானுங்க.கவர்மெண்டுல இருக்கிறவங்களும்  அதைத்தான் செய்றானுங்க.எங்களுக்குன்னு  இருக்கிற குல வழக்கத்தை மனுசப்பயலுக லாவுறது  என்ன நியாயம், நேர்மை?

இப்ப வாழறதுக்கு இடமில்லாம நாங்க டவுனுக்குள்ள வரவேண்டியதாகிப் போச்சு. காட்டைஎல்லாம் கள்ளத்தனமா பட்டா போட்டுக்கிட்டு வீட்டை கட்டிப் போட்டுக்கிட்டா நாங்க எங்க வாழ்றது? மிருகங்க வாழ்ற எடத்தை கைப்பத்தி வீட்டை கட்டுறோமேன்னு வெட்கப்பட வேணாமா? கிண்டிக்கி பக்கமா இருக்கிற காட்டுக்குள்ள வீடு கட்டப்போறாய்ங்கலாம்.இவனுங்களைஎல்லாம்  இன்னொரு பேய் வெள்ளம் வந்து கொண்டு போவணும்.நாங்க புருஷன் பொண்டாட்டி சந்தோசமா இருந்தால் பிடிக்காம கல்ல  கொண்டு எறியிராய்ங்க  நாங்க  பரவாயில்லை. நாய் அண்ணாத்தைகள்  பாடுதான் படுபாவம். என்னமோ இவனுக சந்தோசத்தை நாங்க வந்து கெடுத்த மாதிரி ஈரக்கொலை  அந்து விழுகிற அளவுக்கு  ஆக்ரோசமாக வீசுவாய்ங்க. வெளங்குவானய்ங்களா?

நாங்கள்லாம் அஞ்சறிவு!.மனுசங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு அறிவு. ஆறறிவு இருக்கிறவய்ங்க பண்ற காரியத்தையா பண்றாய்ங்க! தார்ப்பாய் சுருட்டி!.கம்மாய்கள், மலைகளை முழுங்கிட்டு சுக்குத்தண்ணி குடிக்கிராய்ங்கய்யா.! .தேர்தல் வரப்போகுதாம். ஊர்ப்பயலுக  சொத்தை அமுக்குறதுக்கு அதிகாரமா ?.எச்சரிக்கையா ஒட்டு போடுங்க.

உங்க அன்புள்ள குரங்கார்.
இது பிடிச்சிருந்தா என்னை ஆதரிங்க. 

No comments:

Post a Comment