Monday 21 March 2016

நீ யார்ரா.........தொன்ன..?


                         ''நீ   யார்றா தொன்ன...?"

                         கன்னத்தில் விழுகிறது 'பளார்!'
                         
                         எதிரில் நின்றிருந்தவன் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு அறை விழும் என்பதை!

                       கன்னத்தை தடவியபடியே கேட்கிறான் .கண்கள் கலங்கியிருந்தன.

                        ''அப்படியென்ன தப்பா கேட்டேன்.இந்த வாட்டி யாருக்கு ஓட்டு போடுவிங்கன்னுதானே கேட்டேன்.!அதுக்கா தொன்னன்னு கெட்ட வார்த்தை? நீங்க யாரு  என்ன அடிக்க? நான் கேட்டதுல என்ன தப்பு?"- பலவீனம் குரலில்!

                     ''பேசாம போயிரு..நீ கேட்டா நா சொல்லனுமா? மவனே! மாத்து  வாங்கியே வீங்கிடுவே!போயிரு!"

                        "சின்ன பையன  அடிக்கிற மாதிரி கை நீட்டிட்டிங்க.நா ஒன்னும் அனாதப்பைய  இல்ல. நானும் டெய்லி  ஷேவ் பண்ற ஆம்பளதான்!"

                     "பார்றா..எதித்து பேசறத! நீ செரச்சா என்ன... செரய்க்காட்டி என்ன...பாக்கிறதுக்கு ஷூவெல்லாம் போட்டிருக்கியேன்னுதான்  அறையோடு  விட்டேன்.இல்லேன்னா  மண்ணுல பொரட்டி எடுத்திருப்பேன்.இன்னிக்கி  கட்டிங்  போடக்கூட காசு தேறல.எல்லா பொறம்போக்குகளும் கிரடிட் கார்டோடுதான்  அலையிறான். இப்ப சொல்றா... நீ..யார்றா?"

             "நான் கருத்துக் கணிப்பு எடுக்கவந்த ரிப்போர்ட்டருங்க!" .  
இது தான் தற்போது  நாட்டு நிலைமை....நான் சொன்னது  சரியா இல்லையான்னு சொல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு, உண்மையை  எழுத முடியலிங்க!
 எனக்கு லைக் போடுங்க சார்! குரங்கு பாவம் பொல்லாதுங்க!
























No comments:

Post a Comment