Wednesday 30 March 2016

விக்ரமுக்கு தேசிய விருது ஏன் இல்லை?

நீ  ஒரு  தமிழன். 
"இது போதுமா? உடலை வருத்துவதும்  நடிப்பதும்  உனக்கு தொழில்தானே? நாய்  வேஷம் போட்டால்  குரைத்துத் தானே  ஆக வேண்டும். அதற்காக  இந்தியாவின்  சூப்பர் ஸ்டாரை  விஞ்சி விட்டதாக  அர்த்தமா?"  
                              
                             இப்படியெல்லாம்  தேர்வுக்குழுவில்  விவாதித்திருப்பார்கள். அங்கிருந்தவர்களில்  பெரும்பாலும் 'அகண்ட  பாரதம்' பார்த்தவர்கள். அவர்களது  கண்களில்  பாரதமாதாவை  விட  தமிழன்னை  பரம ஏழையாகவே தெரிந்திருப்பாள்.  சாகாவரம் பெற்ற  அந்த அன்னையின்  பிள்ளைகள் சவலையாக தெரிவார்கள்.  தமிழ்ச்சினிமா  வரலாற்றில்  திருப்புமுனையை  ஏற்படுத்திய  நடிகர் திலகத்தை  உலகம் உற்று ப் பார்த்து  வியந்த காலத்தில்  பாரத புத்திரர்கள்  அந்த திருமகனை  புறக்கணித்ததை   மறக்கவில்லை. மறக்கவும் கூடாது.   எவனாவது  அன்று  எதிர்த்து  கொடி பிடித்தானா? கோஷமிட்டானா?

                    அன்றைய  தமிழக  அரசாவது  நெஞ்சு  நிமிர்த்தியதா? இல்லையே!

                   இன்று மட்டும்  நடிப்பில்  அரிய சாதனையை செய்த  விக்ரமுக்கு  எப்படி  விருது  கொடுப்பார்கள்?

                       எல்லாமே  அரசியல்தான்!

                     இயக்குநர்  ஷங்கர்  ஏதாவது  வாய் திறந்திருக்கிறாரா? தன்னால்  உடல் நலத்தை  கெடுத்துக்கொண்டு தனது  கதாபாத்திரத்துக்கு  உயிர்  கொடுத்த  உயர்ந்த  நடிகனுக்கு  ஏன்  விருது  வழங்கவில்லை  என கேள்வி  எழுப்பினாரா? சுயநலம். ஊமைத்தனம். 

                   நடிகர் சங்கமாவது  கண்டனத்தை  பதிவு  செய்ததா?

                   அதுவும்  பம்மாத்துடன்  பதுங்கி  கொண்டுவிட்டது. இது  எல்லா  காலத்திலும்  நடப்பதுதான்!

                            அரசியல்  கட்சிகளுக்கு  அதிகாரத்தின்  மீது  நாட்டம். பதவிகளே  குறிக்கோள். அவர்களுக்கு  தேவைப்படும்போது  ஆட்சியின்  பலத்தை அதிகாரத்தை  பயன்படுத்தி  அச்சுறுத்தி  காரியத்தை  சாதித்துக் கொள்வார்கள். இதுவும் காலம் காலமாக நடப்பதுதான்!

                        எனவே  அமிதாப்  பச்சனுக்கு  தேசிய விருது  கிடைத்திருப்பது  மத்திய அரசின்  கடைக்கண்  பார்வையில்  கிடைத்திருக்கும்  அருட் கொடையே!

                            ஆகவே  புலம்பிப்  பயனில்லை!

 

No comments:

Post a Comment