Sunday 27 March 2016

என்னடா...நீ... பெரிய ம.....ரா?

தற்போதைய  இளைஞர்களின் 'ஹேர் ஸ்டைல்"களை பார்க்கிறபோது  பாலாவின் பரதேசி பட ஹீரோ அதர்வாவின்  தோற்றம் கண்களில் படராமல்  இருக்கமுடியாது, அதர்வாவைவிட வேறு மாடல்களில் தலை அலங்கோலம்  சாரி...அலங்காரம் பண்ணிய  அழகன்களை காண முடிகிறது. எரிச்சல்தான்  வருகிறதே  தவிர ஈர்க்கவில்லை.

' பாரு அப்பன் சொல் கேக்காத தறுதலைகளை!'' என முனகிக்கொண்டேதான்  செல்கிறார்கள்.அதற்கான 'ஹேர்கட்' கட்டணத்தைக் கேட்டால் தலை சுற்றிப் போகிறது. ஆயிரக்கணக்கில் சொல்கிறார்கள். ஆனால் நீளமான முடிகளை  வைத்திருப்பவர்களுக்கு  அது ஆறாவது சென்ஸ் என்கிறது புராதன வரலாறு.

இங்கிருந்து உதாரணம் சொன்னால் கலாசாரத்தின் கற்பை நான் சூறையாடி விட்டதாக குற்றம்,பழி,பாவம் சொன்னாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அதனால் ஆசைப்படுகிற வெளிநாட்டு உதாரணங்களை சொல்கிறேன் மக்களே!

சாம்சன் என்கிற மாவீரனை பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.ஒரு வேளை சாம்சனும் டிலைலாவும் என்று காதலியையும் இணைத்துச்சொன்னால்  சடக்கென ஞாபகம் வந்தாலும் வரலாம். சாம்சனுக்கு பலமே அவனுடைய  முடியில்தானாம். நீளமாக தலைமுடியை வளர்த்து இருந்ததினால்தான்  அவனால் சிங்கத்தை வெல்ல  முடிந்திருக்கிறது.,இந்த ரகசியத்தை அறிந்ததும் சாம்சனின் முடியை வெட்டி எறிந்ததாக ஒரு கதை உண்டு. இதை கதை என்று  ஒதுக்கி விட்டாலும்  பழைய காலத்து சிலைகளும் கண்டு பிடிப்புகளும்  மயிருக்கு மரியாதை உண்டு என்று நினைக்க வைக்கிறது.
என்னடா மயிரு..அவன் கெடக்கிறான் என்று நம்மால் ஒதுங்கிப்போக முடியாது. அவன் அலட்சியப் படுத்தப்படக்கூடியவன் அல்லன்..

ஆதிகாலத்து அமெரிக்கனுக்கு மயிர்தான் 'ஆன்டனா'வாக  உதவியிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மிலிட்டரி கட் பண்ணியதால்தான்  எதிரிகளிடம் சில நேரங்களில் தோல்வியுற நேர்ந்ததாம்.சொல்கிறார்கள்.நரம்பு மண்டலத்துடனான தொடர்பு பாதிக்கப்படுகிறதாம்.ஆதிகாலத்து 'மம்மி'களை ஆராய்ந்ததில் மயிர்களை வைத்துதான் சில உண்மைகளை கண்டறிந்திருக்கிறார்கள்.கடல் வாழ் உயிரினங்கள் உணவாக பயன்பட்டிருக்கிறது.பீர்  குடித்திருக்கிறார்கள்.கிரேக்கத்துப் பெண்கள் தங்கள் முடியை விதம் விதமாக அலங்கரித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். அத்தகைய மயிரைத்தான் வெட்டி எறிகிறார்கள்..

இது ஒரு தகவலுக்காகதான். குரங்கு உடம்பு முழுவதும் மயிர்தான். அதற்கு ஆறு அறிவு இருக்கிறதா என்று என்னிடம் கேட்கக்கூடாது.

வலைப்பூ நண்பர்களே..எனக்கு ஓட்டுப் போட்டு உங்கள் ஆதரவை தாருங்கள்!

 . 

No comments:

Post a Comment