Saturday 24 September 2016

காதல்..காமம். ( பகுதி.7.)

"செங்கமலம்...ஏதாவது  கெடைச்சிச்சா...! அங்கம்மா கெழவி சொல்றபடி  பாத்தா  அன்னிக்கி பர்ஸ்ட் நைட்  நடந்திருக்கு,,," என்று  சொல்லிவந்த  இன்ஸ்பெக்டர்  ராம்குமார் என்ன நினைத்தாரோ ...சற்று  தயங்கியபடி  "பொதுவா பர்ஸ்ட் நைட்  பொண்ணு வீட்டில்தானே நடக்கும். இவங்க ஏன் மாப்ள வீட்டில நடத்திருக்காங்க. இந்த ஆங்கிலும் நாம்ப இன்வெஸ்டிகேட் நடத்தனும்?" என்றார்.

எதிரில் இருந்த எஸ்,ஐ. சிதம்பரம் " அந்த ஆங்கில்லேயும் என்கொயரி  பண்ணிட்டேன் சார், அன்னமயிலுவுக்கு ஒரு அக்கா இருக்கா. அவளுக்கு  அம்மை போட்டிருந்ததால சுத்தபத்தமா இருக்கணும்கிறதுக்காக மாப்ள  வீட்டிலேயே பர்ஸ்ட் நைட்டை நடத்திருக்காங்க. அன்னமயிலுவின் அக்கா  ரொம்பவும் நொந்து போயிருக்கு.அன்னமயிலுக்கு தங்கராசுவை ரொம்பவும்  பிடிச்சிருந்ததாலதான் கல்யாணத்தை தடபுடலா நடத்திருக்காங்க."

"வெல்....  பர்ஸ்ட் நைட் நடந்த பெட்ல இருந்த பெட்ஷீட், அந்த பொண்ணோட  இன்ஸ்கர்ட், பிளவுஸ் இதெல்லாம் பாரன்சிக் ரிப்போர்ட்டுக்கு  அனுப்பிச்சிருந்தமே வந்திருச்சா,,அது வந்தாதான்யா .மேக்கொண்டு ஏதாவது  கெடைக்கும்."

"இன்னும் ரெண்டு நாள்ல வந்திரும். நாம்ப இதுவரை விசாரிக்காம இருக்கிறது செத்தவனோட அம்மா மாயக்காளத்தான். எது கேட்டாலும் மயக்கம் போட்ருது. அது டிராமா போடுற மாதிரி தெரியிது. மாயக்காளை அரட்டி மெரட்டி கேட்டாத்தான்  வாயை புடுங்கமுடியும் சார்!"

"சுகர் பேஷண்டா இருந்து தொலச்சிறப் போறாப்பா! செங்கமலத்த அனுப்பி நைசா  விசாரிக்க சொல்லுவோம்."

"செய்றேன் சார்!" அருகில் நின்று கொண்டிருந்த செங்கமலம் சல்யூட்  அடித்தாள்.

''உனக்கு அந்த வீட்டில வேற யாரையாவது தெரியுமா?"என்று கேட்ட ராம்குமாருக்கு அப்படி ஒரு பதில் வரும் என்பது தெரியாது.

"நான் கட்டிக்கபோறவரு அங்கதான் பண்ணை வேலை பார்க்கிறாரு."

ராம்குமாரும் சிதம்பரமும் சேர்ந்து சிரிக்கிறார்கள்." அப்ப ஈசியா போச்சு..மாயக்காளை செங்கமலம் வளச்சி போட்றமாட்டாளா  என்ன.? நீ மொதல்ல கெளம்பு ..."என்று அவளை அனுப்பி வைத்தார்கள்.

இப்போது அந்த அறையில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே!

" ஏய்யா..சிதம்பரம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல  ரொம்பவும் கிளீயரா  இருக்கு.தங்கராசு உடலுறவு வைக்கல. அதுக்காக அவன் எந்த முயற்சியும் பண்ணியிருக்கமாட்டான். சிங்கிள் டிராப் செமன் கூட வரலன்னு  அழுத்தம் திருத்தமா இருக்கு. ஆனா  அன்னமயிலு  விஷயம் வேற மாதிரி இருக்கு. கன்னி கழிஞ்சிருக்குன்னு  சொல்றாங்க. அந்த பொண்ணும் வாய தெறக்க மாட்டேங்கிது..பாரன்சிக் ரிப்போர்ட் வந்தா கடுமையா  ஆக்சன் எடுக்க முடியும். "

"சார் ..வெள்ளிங்கிரி பய வெளையாடியிருப்பானோ...?

"அதெப்படி சார் பர்ஸ்ட் நைட் ரூமுக்கு அவன் போயிருப்பான்? குடும்பத்தில் உள்ளவங்க சும்மா விட்ருப்பாங்களா? எனக்கென்னமோ வேற மாதிரியான டவுட்  இருக்கு சார்.தங்கராசுக்கும் அன்னமயிலுக்கும் அந்த ரூம்ல சண்டையோ,வாய்த்தகறாரோ நடந்திருக்கலாம்?"

"சரி ..உன் பாயின்ட் படியே டிஸ்கஸ் பண்ணுவோம்.எதுக்காக சண்டை வந்திருக்கும்னு நெனைக்கிறே? சண்டை போடுற மூடே வராதேய்யா. இந்த காலத்து பயலுக போனமா ஜோலியை முடிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு  எப்படா போகலாம்னுதான் இருப்பாங்க. அதான் பழனி டாக்டருங்க லேகியம்  விக்கிறாங்களே?"

சிதம்பரம்  தொப்பியை கழற்றி விட்டு மண்டையை சொறிகிறார்.

 "எதுக்குய்யா அங்க சொறியிற? எதுக்கும் வீடியோவை பார்த்து வைக்கலாம்.ஏதாவது க்ளு கெடைக்காதா?"

"ஒ.கே சார்"

தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

அடுத்து என்ன நடந்திருக்கும்? வீடியோவில் க்ளு கிடைக்குமா?

( மதிப்பிற்குரிய நண்பர்களே! என்னுடைய பதிவுகள் பற்றி எதுவுமே, சொல்லாமல்  இருந்தால் அறிமுக எழுத்தாளன்( ?) எப்படி திருந்த முடியும்.பாலோ பண்ணுங்க சார், கருத்தை சொல்லுங்க சார்!)

No comments:

Post a Comment