Thursday 22 September 2016

தொடரி. பட விமர்சனம் அல்ல. ஒரு பார்வை.!

டைரக்டர் பிரபுசாலமன் படம் என்றால் விரும்பி பார்ப்பேன்.மனம் விட்டு சிரிக்கலாம். மனதில் உள்ள கவலைகளை சற்று கரைக்க முடியும்.அதை எதிர்பார்த்தே  சென்றேன்.

பல பத்து வருடங்களாக படங்களை பார்க்கிறவன்,எனவே குற்றம் குறைகளை சொல்லக்கூடிய பெரிய புடுங்கி என்கிற புத்தி எல்லாம் எனக்கு கிடையாது.

டில்லியிலிருந்து சென்னை செல்லக்கூடிய  ரயிலில் ( தொடரி .) மத்திய அமைச்சர் ராதாரவி, சினிமா நடிகை அவரது அம்மா மற்றும் நடிகையின் உதவிப்பெண் கீர்த்தி ,பான்ட்ரி காரில் வேலை பார்க்கிற தனுஷ் ,பயணிகள் இவர்கள்தான்  முக்கிய கேரக்டர்கள் .என்றாலும் தம்பி ராமையா,கருணாகரன்  ஆகியோரை  மறக்கவே முடியாது.

 வந்தாரை வாழவைக்கிற  தமிழ்நாடு என்று தனுஷ் தமிழனாகவும் ,திறமைசாலிகள்டா மலையாளிகள்  என்று தமிழ் படங்களால்  வாழ்வு பெற்றவர்களை சொல்லும் மலையாள அதிகாரி ஒருவரையும்  காட்டுவதால் தமிழ்நாட்டில் இருக்கிற மலையாளி விமர்சகர்களுக்கு இந்தப் படம் கசக்கவே செய்யும்.அதிலும் அந்த மலையாளி அதிகாரியை அமைச்சர் ராதாரவி மட்டம் தட்டுவதால்  கோபத்துடன் படத்தை விமர்சனம் செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.

நான் படத்தில் மிகவும் ரசித்தது  தொலைக்காட்சிகளின் வியாபார புத்தியை  துணிச்சலுடன் தோல் உரித்திருப்பதுதான். விமர்சனம் என்கிற பெயரில் படங்களை மட்டம் தட்டுகிறவர்கள் தங்களை சினிமாக்காரர்கள் விமர்சிக்கிறபோது தாங்கிக் கொள்ளவே வேண்டும் அதிலும் விவாத மேடை என்கிற பெயரில்  சில அறிவுக் கொழுந்துகளை விட்டு நையாண்டி பண்ணுவதையும் ,அதில் உள்ள நியாயங்களையும் மறக்கவே முடியாது.
கட்டுப்பாடு இழந்து வேகம் கடந்து செல்லும் ரயிலின் மேற்கூரையில் தனுஷ்  சர்வசாதாரணமாக நடமாடுவது ஏற்க  முடியாத காட்சி ,கிளைமாக்ஸ் நகைக்கவைக்கிறது என்றாலும்  ஓடும் ரயிலை வைத்து மீடியாக்களும் அரசு அதிகாரிகளும் கதை விடுவது மிக மிக ரசனைக்குரியதாக  இருக்கிறது. அரசியல்,மீடியா,இவைகளின்  அநாகரீக முகத்தை பிரபுசாலமன்  காட்டியிருப்பது  இனி தொடரும் என எதிர்பார்க்கலாம். .

No comments:

Post a Comment