Sunday 4 September 2016

சூப்பர்ஸ்டார் கர்ணன்.அப்ப துரியோதனன் யாரு?

உலகமே  சினிமாவை சுத்தும் போது  நாமும்  சேந்து சுத்துனாதான் மருவாதி.! இல்லேன்னா  கூடைய போட்டு நம்மை  கவுத்திப் போட்ரும்!அதனால்தான் ஊரோடு நீயும் சேந்துக்கன்னு  எப்பவோ சில பெரிசுக சொல்லிட்டுப் போயிருக்கு, ஓலகத்தொடு ஒத்து போ!

ஒலகத்தில் உள்ள அழகிக  ஆயிரம் பேரை  அமெரிக்காவில்  உள்ள ஒரு பேப்பர் கணக்கு எடுத்திருக்கு, அதில என்ன  சிறப்புன்னா இந்தியாவை சேந்த ஒரு அழகியா  தீபிகா படுகோனே தான் செலக்ட்  ஆகியிருக்கு.

தமிழ்சினிமாவில் நாம்ப எவ்வளவோ பேரை நெனச்சு  ஜொள்ளு உட்ருக்கோம் பகல்லேயும் கனா கண்ட்ருக்கோம்.ஆனா வெள்ளைக்காரனுக்கு வடக்கத்தி பொண்ணுதான் ஒசத்தியா தெரிஞ்சிருக்கா! கஷ்டமா  இருக்குய்யா! நயன்தாரா  அழகியா தெரியலியா. காஜல தெரியலையா,அன்சிகா மொத்வானியை கூட  சேக்கலேங்கிரபோதுதான்  டவுட்டா இருக்கு,ஊழல் நடந்திருக்கும்னு!என்னவோ தெரியல..காமால கண்ணுக்கு  பாக்கிறதெல்லாம் மஞ்சளா  இருக்குமாமே! ஊழல் நமக்கு  பழகிப் போச்சுங்கிறதால இப்படியெல்லாம்   நெனைக்கிறேனோ?

இருக்கலாம்ங்க!

சென்னை தண்ணிய குடிச்சு  வளந்த  ஆந்திரகாரு மோகன் பாபு  நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திக்  பிரண்ட். .பாபு  படம்  பண சிக்கல்ல  மாட்டிக்கிட்டு முளிச்சபோது  பணம் கொடுத்து  உதவுனவர்  சூப்பர்தான்! அவர்  சென்னைக்கு  வந்து  தன்னுடைய  நெருங்கிய நண்பர் ரஜினிய சந்திச்சு  கட்டித்தழுவி  பாராட்டியிருக்கார். "ரஜினி  இந்த அளவுக்கு வளந்ததுக்கு   மனைவி லதாதான்  காரணம்னு  சொல்லிட்டு  ரஜினிய கர்ணனாகவும் தன்னை துரியோதனன் னு  சொல்லி  சிலித்திருக்கார்  .இந்த காலத்திலேயும்  இப்படிப்பட்ட  ஆளுங்க  இருக்காங்கிற போது  கடவுள்  இருக்கார்னு நம்பித்தான்  ஆகணும்,


No comments:

Post a Comment