Saturday 17 September 2016

ராமன் தேடிய இலங்கை எது?

இராமாயணம் என்பது கற்பனையே அது வரலாறு இல்லை என்பதாக சொல்வதில்  இரு கருத்துகள் எதிர் எதிராக  நிற்கின்றன.

அந்த கதாபாத்திரங்களை கடவுளாகக்  கருதி வணங்குபவர்கள்  பெரும்பான்மையாக  இருக்கிறார்கள்.

காலம் காலமாக  நாடகமாக நடத்தி அந்தக் கருத்தை  வாழையடி வாழையாக மக்கள் மனதில் விதைத்து வந்திருக்கிறார்கள்.

இதை மறுக்க முடியாது!.

 இராவணனை கடுமையான அரக்கனாகவே மாற்றியிருந்தன .அன்றைய தெருக்கூத்தும்  நாடகமும்.!ஆத்திகர்களுக்கும் இதில்  பங்கு உண்டு.!

இராவணன்  பன்முகம் கொண்ட சிவ பக்தன் மன்னவர் மன்னன்,.மனைவியை மதித்து வாழ்ந்தவன் என்பதை அந்த நாடகங்களும் தெருக்கூத்தும்  மறைத்து கொடியவனாக  வரைந்து விட்டன..

டென்னட் என்கிற  வரலாற்று ஆய்வாளர்   இலங்கையின்  வரலாறு பற்றி  அவரது கருத்தை  பதிவு செய்திருக்கிறார்.

"இராமன்  வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் நிலப்பரப்பும் இலங்கையின் நிலப்பரப்பும்  ஒரே நிலமாக இணைந்தே  இருந்தன.அங்கு கடலே இல்லை.கி.மு.2387 -ல் ஏற்பட்ட கடல் கோளின் போது இந்தியாவும் இலங்கையும் கடலால்  பிரிக்கப்பட்டன"

வால்மீகி குறிப்பிடும்  இலங்கை என்பது நிலா நடுக்கோட்டுக்கு அருகில்  அதாவது  குமரி முனைக்கும் தெற்கே உள்ள 'தியாகோ கார்சியா" எனும் சூரியப் பகுதியை சேர்ந்ததாக இருக்கலாம்  என்பது  ஆய்வாளர்கள் கருத்து.!
நூறு யோசனை தொலைவில்  இலங்கை இருந்ததாக வால்மீகி சொல்கிறார்.
( நூறு யோசனை : ஐநூறு மைல்.)

தற்போதைய  இலங்கை  தமிழ்நாட்டுக்கு  மிகவும் அருகில் இருக்கிறது. முப்பது மைல் தொலைவுதானே!

ஆக  நமது நாடு  மிகப்பெரிய பேரழிவு சுனாமியால்  இலங்கையை  துண்டாக  கத்திரித்து போட்டிருக்கிறது.

அது  நமது நாடுதான்!

No comments:

Post a Comment